ஆன்-லைனில் இன்ஜினியரிங் பொது நுழைவுத்தேர்வு
புதுடில்லி : அடுத்த ஆண்டு முதல் அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.,) பரீட்சார்ந்த முறையில் ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். நாட்டின் பெருமைமிக்க கல்வி நிறுவனங்களாக கருதப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.,), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி.,) ஆகியவற்றில் மாணவர்களை சேர்ப்பதற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தவிரவும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் குறிப்பிட்ட மாநில கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் மற்றும் கட்டடக்கலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையும், இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதால், இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
உள்நாடு மட்டுமின்றி, துபாய் மற்றும் சவூதி அரேபியா ஆகிய வெளிநாடுகளிலும் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக கருதப்படும் இதில், கடந்த ஆண்டு 12 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,) சேர்வதற்கு நடத்தப்படும் சி.ஏ.டி., நுழைவுத் தேர்வு, கடந்த ஆண்டு ஆன்-லைனில் நடத்தப்பட்டது. இதேபோன்று, இன்ஜினியரிங் பொது நுழைவுத் தேர்வையும் ஆன்-லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை (ஏ.ஐ.இ.இ.இ.,) ஆன்-லைனில் நடத்த சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. நாட்டின் 84 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இன்ஜினியரிங் பொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், நாட்டின் 20 முக்கிய நகரங்களில் இத்தேர்வு ஆன்-லைனில் சோதனை முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கும் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
6:41 PM | | 0 Comments
"எழுத்தறிவைப் போல சூழலியல் கரிசனமும் அவசியம்'
சூழலியல் ஆர்வலர் அடைமொழி சிலருக்கு மட்டுமே உண்டு. ஆனால், "சூழலியல் கரிசனம்' அனைவருக்கும் இருக்க வேண்டும். எழுத்தறிவு போல, சூழலியல் கரிசனம் பொதுமக்களுக்கு அவசியம். படித்தவர்கள், வசதிபடைத்தவர்களிடையே சூழலியல் கரிசனம் விலகி உள்ளது. யார்வீட்டு கல்யாணமோ என்ற அளவில்தான் உள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான விஷயம் பெரிதாகி, பிரச்னையான பின்னரே போராட்டங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் அரசு சூழலியல் பற்றிப் பள்ளிகளில் பாடமாக்கி இருக்கிறது. அதற்கான பாடப்புத்தகங்களும்; சூழலியல் பாடத்தை நடத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் இல்லை. சூழலியலை பாடமாக மட்டும் பார்க்கக்கூடாது. அது ஒரு விழிப்பு; பார்வைக்கோணம்; உலகைப்பற்றிய புரிதல்; உயிர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு பற்றியதுதான் சூழலியல் கரிசனம். வறுமைக்கும் சூழலியல் கரிசனத்துக்கும் தொடர்புண்டு. எப்போதெல்லாம் சூழலியல் பாதிக்கப்படுகிறதோ அதனால் நேரடியாகவும், முதலிலும், அதிகமாகவும் பாதிக்கப்படுவது ஏழைகள்தான். காடுகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பின்புலத்தில் கேள்வி எழுப்ப வேண்டும். எல்லா வாழ்வாதாரங்களுக்கும் காடுகள்தான் அடிப்படை. மலைகளையும், காடுகளையும் அழித்துவிட்டால், நீராதாரங்கள் அழிந்துவிடும். காடுகளை அழித்ததன் பலன், நீர் நிலைகள் வறண்டு விட்டன. நதிகள், பூமியின் தழும்புகளாக மாறிவிட்டன. கானகத்தின் பல மரங்கள் இன்னும் பட்டியலிடப்படவே இல்லை. மனிதன் உண்ணும் உணவுகளில் 85 சதவீதத்தை எட்டுவகையான பயிர்களில் இருந்துதான் பெறுகிறோம். காடுகளைப் பாதுகாத்தால், கூடுதலான தாவரங்களில் இருந்து வேறு வகையான உணவுகளைப் பெற முடியும். உணவுத்தட்டுப்பாடு தவிர்க்கப்படும். பல நோய்களுக்கு மருந்து கிடைக்கும். தேவையற்று நதிகளை இணைப்பது குறித்து சிந்திப்பது இயற்கைக்கு எதிரானது. பின் எவ்வாறு, தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வது என்ற கேள்வி எழும். காடுகளை மீட்டெடுத்தல், மழை நீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேரணைகள் கட்டுவது, நதிநீர் இணைப்பு போன்றவை உள்ளூர் முயற்சிகளைத் தடை செய்யும். இவ்வாறு, சுற்றுச் சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் பேசினார்.
ஓசை நிர்வாகி காளிதாஸ் விருது ஏற்புரையில், "மாணவர்களிடையே ஓசை அமைப்பு இயற்கை குறித்த விழிப்புணர்வை விதைத்திருக்கிறது; தொடர்ந்து விதைத்தும் வருகிறது.வளர்ச்சித்திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. வளர்ச்சித் திட்டங்கள் பெயரில், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை, அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இளம் தலைமுறையினரிடையே சூழலியல் விழிப்புணர்வு அதிகரித்து வருவது நம்பிக்கையூட்டுகிறது,'' என்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுனர் ராஜரத்தினம், தொழிற்சேவைப்பிரிவு இயக்குனர் விஸ்வநாதன், ரோட்டரி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
5:35 AM | | 0 Comments
வீட்டுக்கே வருகிறது "பைபர் ஆப்டிக் கேபிள்'; ஒரே இணைப்பில் போன், "டிவி', நெட்
இந்திய தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., "3ஜி' அலைவரிசையான, முகத்துக்கு முகம் பார்த்து பேசும் செல்போன் சேவையை சில மாதங்களுக்கு முன் கோவையில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, தற்போது வீட்டுக்கு நேரடியாக பைபர் ஆப்டிக்கல் கேபிள் சேவையை அளிப்பதால், கோவை மக்கள் அதிநவீன தொலைத்தொடர்பு சேவையை பெற முடியும். இந்த பைபர் ஆப்டிக்கல் கேபிள் பைபர் வழியாக, ஒரே சமயத்தில் "டிவி' இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட், இன்டர்நெட் டெலிபோன், வீடியோ கான்பிரன்சிங் போன்ற சேவைகளையும் எளிதாக பெறமுடியும். இந்த சேவையை, "எப்.டி.டி.எச்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை அறிமுக துவக்க விழா, கோவை, புரூக் பீல்டு வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், எஸ்.பி., கண்ணன் முதல் இணைப்பை வழங்க, புரூக் பீல்டு இயக்குனர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில்,எஸ்.பி., கண்ணன் பேசியதாவது: தொலை தொடர்புத்துறையில் அடுத்த கட்ட நவீன தொழில்நுட்பமே பைபர் டி.டி.எச்., இணைய உலகில் "ஹேக்கிங்' போல, தொலைபேசியில் "பிரிகிங்' என்ற முறை உண்டு. தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது; "டேப்'செய்வது போன்றவையும் இதில் அடங்கும்.பைபர் ஆப்டிகல் தொழில்நுட்பத்தில் அதிவேகத்தில் டேட்டாக்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றை இடைமறிப்பதும் கூட கடினம். எனவே, தொலைபேசி உரையாடல்களை இடைமறிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், என அரசுக்கு கோரியுள்ளோம். நவீன தொழில்நுட்பங்களை பொதுமக்கள் நாட்டின் மேம்பாட்டுக்காகவும், நல்ல செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
பைபர் டி.டி.எச்., சேவை குறித்து பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் மேத்யூ கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இச்சேவை துவங்குகிறது. முதலில் நகரப்பகுதிகளுக்கு வழங்கப்படும். பின், அனைத்து இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஒரே இணைப்பில் கேபிள் "டிவி'; பிராட்பேண்ட், தொலைபேசி இணைப்புகளை தனித்தனியாக ஒரே சமயத்தில் பெற முடியும். இதற்கான மோடத்தில் ஐந்து இணைப்புகளுக்கான இடம் விடப்பட்டிருக்கும். மூன்று சேவைகளை இவ்விணைப்புகள் வழியாக பெறலாம். எதிர்காலத்தில் கூடுதல் வசதிகளை பெற கூடுதலான இரு இணைப்புகள் விடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் எக்சேஞ்ச் வரை மட்டுமே பைபர் ஆப்டிகல் இணைப்பு இருந்தது. தற்போது வீடு வரை வருகிறது. பிராட்பேண்ட் திட்டத்தில் 500 ரூபாய் முதல் இச்சேவையில் பெற முடியும். டெலிபோனுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். வரும் முதல் தேதியில் இருந்து தரைவழித் தொலைபேசிக்கு வினாடிக்கு 27 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது. கேபிள் "டிவி'யைப் பொருத்தவரை இந்தியாவின் மிகத்துல்லியமான ஒளிபரப்பாக இருக்கும். 100 ரூபாய் முதல் வாடிக்கையாளர் விரும்பும் "பேக்கேஜை' தெரிவு செய்யலாம். இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் மேத்யூ கூறினார்.
நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் முரளிதரன், துணைப்பொதுமேலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
5:33 AM | | 0 Comments
விப்ரோ நிறுவனம் கல்விக்காக 2 பில்லியன் டாலர் உதவி
5:27 AM | | 0 Comments
Blog Center - வலைப்பூ மையம்!
blogcenter - blogger's can update their posts here!
வலைப்பூ மையம்! - வலை பதிவர்கள் தங்களது பதிவுகளை பதிவு செய்திடும் களம்!
அன்புடையீர் வணக்கம்!
இன்றைய நாளில் இணையம் அறிந்த நண்பர்கள் அனைவருமே (பெரும்பாலும்) வலைப்பூ நடத்தி வருவது கண்கூடு.
வலைப்பூவில் பதிவு செய்யும் பதிவுகளை பலரிடமும் கொண்டு சேர்க்கும் பல்வேறு திரட்டிகள் இருந்தாலும் அனைவரது பதிவுகளையும் அனைவரும் கொண்டு சேர்க்கும் வகையிலும் தெரிந்தெடுத்து படிக்கும் வகையிலும் ஒரு மடலாடற் குழுமம் இருப்பின் நல்லது என்று தோன்றியது.
வலைப்பூ நடத்தி வரும் பதிவர்கள் அனைவரும் தங்களது அனைத்து பதிவுகளையும் நமது குழுமத்திலும் பதிவு செய்து மேலும் பலரை சென்றடைய வரவேற்கிறோம்!
நன்றி..!
என்றும் அன்புடன்...
kindly visit:
4:16 AM | | 0 Comments
விண்வெளியில் மனிதன்
இஸ்ரோ புதிய திட்டம்:
"நிலவில் உயிர் வாழ்வது தொடர்பான, "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, "இஸ்ரோ' விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசினார். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, திருப்பூரில் இரண்டு நாட்கள் நடந்தது; 143 பள்ளிகளைச் சேர்ந்த 210 அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 10 ஆயிரம் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் நிறைவு விழா, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.
இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணசாமி பேசியதாவது: தற்போது, 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, மற்ற நாடுகளுக்கு முதன்மையாக இந்தியா விளங்குகிறது. விண்வெளி, செயற்கைக் கோள்களின் பயன், தேவை அதிகமானோருக்கு தெரிவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் நாட்டின் பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி மேம்படும்.
பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வெற்றி கண்டாலும், வரும் காலத்துக்கு இது போதாது. பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டாலும், நாம் செலுத்திய, "சந்திரயான்' நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முறையாக உறுதிப்படுத்தியது; உலக நாடுகளுக்கு நம்மை அடையாளம் காட்டியது. இதனால், பல நாடுகள் நம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
அடுத்ததாக, ரஷ்யாவுடன் இணைந்து புது திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது, நிலவில் விண்கலம் செலுத்தி, அதிலிருந்து ரோபோ 100 மீ., நடந்து சென்று, அங்குள்ள மண்ணை எடுத்து ஆராய்ச்சி செய்வது பற்றியது. இதில், கடுமையான சவால்கள் உள்ளன. மேலும், நிலவில் உயிர்வாழ்வது குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. "விண்வெளியில் மனிதன்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சத்தியபாமா, எஸ்.ஆர்.எம்., - ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரோ, அக்கல்லூரிகளுக்கு உதவி வருகிறது. யார், இதுபோல் முயற்சி எடுத்தாலும் இஸ்ரோ உதவ தயாராக இருக்கிறது. இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.
8:08 AM | | 0 Comments
எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வு முடிவுகள் -நாளை வெளியீடு
7:38 AM | | 0 Comments
இயற்கை பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால்..
5:28 AM | | 0 Comments
B.Ed., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை
கோவை : "இந்தியாவுக்கு, பி.எட்., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது,'' என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பத்மநாபன் கூறினார்.
கோவை பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பத்மநாபன் பேசியதாவது: கல்வி என்பது எதிர்காலத்துக்கான முதலீடு. நாம் பெறும் உயர்கல்வி, வறுமையையும், வேலை வாய்ப்பின்மையையும் அகற்ற உதவ வேண்டும். ஆசிரியரை மையமாகக் கொண்ட கல்வி முறையில் இருந்து, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறைக்கு மாற வேண்டும். நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்தால், நம்பிக்கையுடன் வகுப்பறையை சந்திக்கலாம். வகுப்பறையில் சுதந்திர காற்று வீச வேண்டும். நல்ல நடத்தையுடன் சிறந்த ஆசிரியர் என்ற பெயர் பெற வேண்டும்.
நீங்கள் அளிக்கும் பயிற்சி, மாணவர்களிடம் ஏற்கனவே புதைந்துள்ள தெய்வீக சக்தியை வெளியே கொண்டு வர உதவ வேண்டும். முன்னர் மாணவர்களின் கண்ணை மட்டும் விட்டு வைத்து, அடிக்குமாறு பெற்றோர் கூறினர். இன்று பெற்றோரின் நிலை வேறு. ஆகவே கால மாற்றத்துக்கேற்ப ஆசிரியர்களும் தங்களை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமானது. ஆசிரியர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. உங்களிடம் கற்கும் மாணவர் மனதில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய உதவுங்கள். மத்திய ஆசிரியர் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, இந்தியாவுக்கு பி.எட்., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.
இன்று, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 50 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். பல மாநிலங்களில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்தான் பணியில் உள்ளனர். தமிழகத்தில் வாய்ப்புகள் கதவை தட்டும் அளவுக்கு உயர்கல்வித் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவில் முதல் முறையாக தமிழகத்தில்தான் ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கென தனி பல்கலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பத்மநாபன் பேசினார்.
4:37 AM | | 0 Comments
கல்வி கடனுக்கு வட்டி தள்ளுபடி
8:00 AM | | 0 Comments
அரசுப் பள்ளிகளுக்கு 4,944 கூடுதல் வகுப்பறை
7:59 AM | | 0 Comments
அனைவருக்கும் வங்கி சேவை திட்டம் இந்தியன் வங்கி துவக்கம்
9:23 AM | | 1 Comments
இந்திய மேலாண்மை நிறுவன வகுப்பு துவங்க குழுவினர் ஆய்வு
திருச்சி: திருச்சி அருகிலுள்ள பெல் நிறுவன வளாகத்தில் இந்திய மேலாண்மை நிறுவன வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச்செயலாளர் (மேலாண்மை) டாக்டர் சர்மிளா மேரி ஜோசப் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்திய மேலாண்மை நிறுவன வகுப்புகளை பெல் நிறுவன வளாகத்தில் தற்காலிகமாக தொடங்கவும், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக்கழக வளாகத்தில் மாணவர் தங்கும் விடுதியை தொடங்குவது குறித்தும் இக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், சூரியூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் தொடங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 200 ஏக்கர் நிலத்தையும் இக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, திருச்சி மாவட்ட கலெக்டர் மகேசன் காசிராஜன், திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குனர் டாக்டர் பிரபுல்ல அக்னி சேஷாத்திரி, துவாக்குடி தேசிய தொழில்நுட்பக்கழக இயக்குனர் (பொ) டாக்டர் சிவம், மத்திய பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் செல்வராஜ், டி.ஆர்.ஓ., ராமன், ஆர்.டி.ஓ., மகாலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
9:19 AM | | 1 Comments
ஆபத்து என்றால் குரல் கொடுங்கள்: மன இயல் நிபுணர் அறிவுரை
பெண் குழந்தைகள் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் பேசத் தயங்கக் கூடாது. பெற்றோரிடமோ அல்லது தோழிகளிடமோ மனதில் உள்ள கருத்துக்களை சுதந்திரமாக பேச வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக் கும் துன்பங்கள் குறித்து மற்றவர்களுக்கு தெரியாது. பெண் குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பாற்ற தொடுதல் முறைகளை அடையாளம் காண வேண்டும். அருகில் வசிப்பவர், நண்பர், உறவினர் சில நேரங்களில் வீட்டில் இருப்பவர்கள் கூட உங்களை "பாதுகாப்பாற்ற முறையில்' தொடலாம். உடனடியாக அவர்களின் கண்களை பார்த்து "என்னை தொடாதே' என்று மிரட்டும் பாணியில் தெரிவிக்கலாம். மீறி தொட முயற்சித்தால் பலத்த சத்தம் போடலாம். மற்றவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பி, உடனடியாக உதவி பெற முடியும். உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு வரும் வழியில் சில டாக்சி, ஆட்டோ டிரைவர்கள், அதே போல பள்ளியிலும் சில நேரங்களில் இந்த பாதுகாப்பாற்ற தொடுதல் நிகழ்ச்சி நடக்கலாம். அதை உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தினமும் பள்ளியில் என்ன நடந்தது என்பதை நேரம் ஒதுக்கி கேட்க வேண்டும். அசாதாரண நிகழ்ச்சி நடந்து இருந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவற்றை குழந்தைகள் வாங்கி சாப்பிடக் கூடாது. பிஸ்கட், ஐஸ்கிரீம், சாக் லெட் போன்றவை ஏற்கனவே திறந்து மூடப்பட்டு இருப்பதை போன்று இருந்தால், அதை கட்டாயம் சாப்பிடக் கூடாது. அபாயகரமான சூழ்நிலையில் 1098 என்ற எண்ணுக்கு போன் செய்ய வேண்டும். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். கூட்டத்தில் தொலைந்து போனால் போலீஸ் இருந்தால் அவர்களிடம் உங்கள் தாய், தந்தை, முகவரி, அவர்களின் மொபைல் எண்களை தெரிவியுங்கள். நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே உங்களுடைய மொபைல் எண்களை கொடுங் கள். புதிய நபர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் தந்தையின் மொபைல் எண்ணை கொடுங்கள். "மிஸ்டு கால்' கொடுக்கும் நபர்களிடம் பேச வேண்டாம். பயன்படுத்தாத "சிம்கார்டு' களை அழித்து விடவும் அல்லது அந்த மொபைல் நிறுவனத்தில் கூறி "சிம்கார்டு' செயல்படுவதை தடை செய்து விடவும். இவ்வாறு மோகன்ராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில், ஏ.வி.பி. பள்ளி தலைவர் சுப்பிரமணியம், தாளாளர் வெங்கடேஷ்வரன், இயக்குனர் குணசேகரன், முதல்வர் சந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
9:17 AM | | 0 Comments
நாளை பிற்பகல் + 2 தனித்தேர்வு ரிசல்ட்
9:15 AM | | 0 Comments
இளமையில் சேமிப்பு; முதுமையில் பாதுகாப்பு: விழாவில் கலெக்டர் பேச்சு
2:28 AM | | 0 Comments
வேலைவாய்ப்பு உருவாக்கும் சமுதாயக்கல்லூரி : ஐ.ஈ.சி.டி., முயற்சிக்கு பாராட்டு
2:14 AM | | 0 Comments
பாலிடெக்னிக் பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம்
2:09 AM | | 0 Comments
பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்.சி.சி.,யில் சேர அழைப்பு
2:04 AM | | 0 Comments
வகுப்பறையில் மாணவர்களை வசப்படுத்துவது எப்படி?
2:02 AM | | 0 Comments
சிறு சேமிப்பு திட்டத்தில் மாணவர்கள் ஈடுபாடு : மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு
8:34 AM | | 0 Comments
பேஸ்புக்கை பயனுள்ள தளமாக மாற்றிய தமிழர்கள்
7:14 AM | | 0 Comments
கல்வி உதவித்தொகை திட்டம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
6:44 AM | | 0 Comments
தொழில் பழகுனர் பயிற்சி வாரிய வேலைவாய்ப்பு முகாம்
6:42 AM | | 0 Comments
வழி தவறும் மாணவச் செல்வங்கள்
சுமார் 14 வருடங்களாக பொரியியல் படித்த மாணவர்களுக்கு பயிற்சியா
12:28 PM | | 0 Comments
பொதுப்பிரச்னையில் மாணவர்களை ஈடுபடுத்தாமல் தவிர்க்க "அட்வைஸ்'
திருப்பூர்: ""பள்ளி மாணவர்கள் தொடர்புடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண மாணவர்களை நேரடியாக ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது,'' என முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 925 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 294 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. 125 உயர்நிலை மற்றும் 138 மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. பள்ளி மற்றும் மாணவர்கள் தொடர்புடைய பிரச்னைகளில் ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களை ஈடுபடுத்தி, தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியை மேற்கொள்கின்றனர். சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போரட்டங்களிலும், மாணவர்களை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, சிறு பிரச்னைகளுக்கும் போராட்டத்தில் ஈடுபடும் குணத்தை இதுபோன்ற சம்பவங்கள் மாணவர்கள் மனதில் ஏற்படுத்துகிறது. இதேபோல், கடந்த வாரம் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதை கலெக்டர் சமயமூர்த்தி கண்டித்தார். இதையடுத்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொடக்க கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கவும், தலைமை ஆசிரியர் கூட்டங்களிலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கவும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில்,""பள்ளிகளில் இருந்து மாணவர்களை இதுபோல் வெளியே அனுமதிக்கக் கூடாது என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்னையாக இருந்தாலும், தலைமை ஆசிரியரோ, பெற்றோரோ அல்லது பொதுமக்கள் தான், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து மாணவர்களை பள்ளி சீருடையில் அழைத்து வருவதை பெற்றோரும் தவிர்க்க வேண்டும். கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
9:16 AM | | 0 Comments
மாணவரை தங்கள் கண்ணாக ஆசிரியர்கள்நினைக்க வேண்டும்: கரூர் கலெக்டர் பேச்சு
கரூர்: ""மாணவர்களை தங்கள் கண்ணாக நினைத்து ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும்,'' என்று கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் கரூரில் நடந்தது.தேசிய விருது பெற்ற அரவக்குறிச்சி உஸ்வதுன்ஹசானா ஓரியண்டல் துவக்கப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆசியாபேகம், மாநில் விருது பெற்ற குப்புரெட்டிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கோவிந்தராஜ், சீத்தப்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மலர்க்கொடி, சிவாயம் மேற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தாரகேஸ்வரி, தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கந்தசாமி, அவரக்குறிச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பூபதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற 31 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த 550 ஆசிரியர்களுக்கும், ஓய்வு பெற்ற 38 ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கலெக்டர் பேசியதாவது:வணக்கத்துக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களை தங்கள் கண்ணாக நினைத்து ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டு ம். தாயாகவும் மாறி அன்பு, க ண்டிப்பு காண்பிக்க வேண்டு ம். முக்கியமாக மாணவர்கள் 100 சதவீதம் மனமகிழ்வோடு, மனநிறைவோடு வாழ ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சி.இ.ஓ., கந்தசாமி, கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர். விழா முடிவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
8:42 AM | | 0 Comments
டிச.3 மாற்றுத் திறனாளிகள் தினம் : மாநில விருதுகளுக்கு வரவேற்பு
சென்னை : டிச., 3 ல் மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுவதால், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியவர்கள் மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிச., 3 ல், "அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் தமிழகத்தில் டிச., 3 ல் மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறன் படைத்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களும், அவர்களுக்காக சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகளும் வழங்கப்படும். மிகச் சிறப்பாக பணியாற்றி சுயதொழில் புரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள், மிகச் சிறந்த முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். இவ்விருதுகளுக்காக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நவ., 10 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது சென்னையில் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்திலோ கிடைக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8:32 AM | | 0 Comments
பெங்களூரூவில் முதல் விமான பல்கலை.,
மெல்போர்ன்: உலகின் முதல் விமான பல்கலை மற்றும் பயிற்சி மையம் பெங்களூரூவில் அமைய உள்ளது. 125 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகும் இந்த மையம் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட சென்டர் பார் ஆசிய பசிபிக் ஏவியேசன் நிறுவனமும்(சிஏபிஏ) பெங்களூரூவை சேர்ந்த சுப்ரமண்ய கன்ஸ்ட்ரக்ஷன் டெவலப்மென்ட் கம்பெனியும்(எஸ்சிடிசி) இணைந்து நடத்த உள்ளது.
வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் விமான போக்குவரத்துக்கு உள்ள தேவைப்பாடு அதிகரித்து வருவதை முன்னிட்டும், அடுத்த பத்தாண்டுகளில் 200 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் விமான போக்குவரத்திற்கு முதலீடு செய்யக்கூடும் என்று எதிர்பார்ப்பதாலும் இந்த பல்கலைகழகம் துவங்கப்படஉள்ளதாக சிஏபிஏ குரூப்பை சேர்ந்த எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் பீட்டர் ஹார்பின்சன் தெரிவித்தார்.
எஸ்சிடிசியின் சேர்மன் பாலசுப்ரமணியம் மேலும் கூறியதாவது: பெங்களூருவை தொடர்ந்து மும்பை ,டில்லி போன்ற நகரங்களில் செயற்கை கோள் கல்வியுடன் இந்த பயிற்சியை அளிக்கப்பட உள்ளதாக கூறினார். தொடர்ந்து இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்,தெற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் இது போன்ற பல்கலைகழகம் துவங்கப்பட உள்ளதாக கூறினார்.
பல்கலைகழகத்தில் சர்வதேச தரத்திலான பைலட்டுகள் இன்ஜினியர்கள்,டிராபிக் கண்ட்ரோலர்கள் மற்றும் பணிமனைகள், ஆய்வகங்கள் ,ஆராய்ச்சிமையம், போன்றவற்றை உருவாக்குவதே எங்களின் நோக்கம். இதற்காக சிஏபிஏ அமைப்பினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் ,சிவில் ஏர் நேவிகேஷன் சர்வீஸ் ஆர்கனைசேஸன்,பிளைட் சேப்டி பவுண்டேசன் போன்ற அமைப்புகளிடம் பேச்சுவார்த்தைநடத்தி வருகின்றனர்.
இந்த பல்கலை கழகம் அமைப்பதற்கு பெங்களூரூவை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் பெங்களுரூவில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆராய்ச்சிமையம் வடிவமைப்பு மையம்,மற்றும் பெரியளவிலான தொழில்நுட்ப மையங்கள் போன்றவையும் மக்களின் காஸ்மோ பாலிடன் வாழ்க்கைதரமும் ஒரு காரணம் என தெரிவித்தனர்.
7:46 AM | | 0 Comments
"கடவுளின் குழந்தைகளுக்கு கெட்ட எண்ணங்கள் இருக்காது'
ஊட்டி : ""பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு, கெட்ட எண்ணங்களும், பிறருக்கு கெடுதல் செய்யும் மனோபாவமும் இருக்காது; அவர்கள் கடவுளின் குழந்தைகள்,'' என, புலிகள் காப்பக கள இயக்குனர் நெகிழ்ச்சி தெரிவித்தார். நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) சார்பில், தீபாவளி திருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி தாவரவியல் பூங்கா அருகேயுள்ள, காது கேளாதோர் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நடத்தப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ""பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு, எவ்வித கெட்ட எண்ணங்களும், பிறருக்கு கெடுதல் செய்யும் மனோபாவமும் இருக்காது; அவர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்களிடம் அன்பு செலுத்தும் பட்சத்தில், கடவுளின் ஆசியை நாம் நேரடியாக பெறலாம்.
மாற்றுத் திறனாளிகளிடம் அன்பு செலுத்துவதற்கு, அனைவரும் முன்வர வேண்டும்; அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதை தொடர வேண்டும்; அப்போது, நிச்சயமாக நம் வாழ்வு சிறக்கும்,'' என்றார். "நெஸ்ட்' அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசியதாவது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள பாதுகாப்பு செயல் திட்டங்களை கடைபிடிக்க வேண்டும்; அதீதமான ஒலிகள், செவிகளின் கேட்கும் திறனை பாதிக்கும். வனம் சூழ்ந்த பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்காமல், வன விலங்குகளுக்கும் வனத்துறை சார்ந்து வசிக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் பயமற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும்.
தொடர் வெடிகள், சிறு குழந்தைகளுக்கு பய உணர்வை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண்கள், இருதயம் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களை, அதிக வெடிச்சத்தம், நச்சுப் புகை பாதிக்கச் செய்யும். மின்சார உபகரணங்கள் உள்ள இடங்கள், மருத்துவமனை, அமைதி காக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் பட்டாசு கொளுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; திறந்தவெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் உடைகளை அணிந்து, பட்டாசு கொளுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளை பயமுறுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான தீபாவளியை, பாரம்பரிய தன்மையோடு, வண்ணமயமான ஆனந்த திருநாளாக கொண்டாட வேண்டும். இவ்வாறு, சிவதாஸ் பேசினார். ஊட்டி உதவும் கரங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், கிரசன்ட் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கிரசன்ட் பள்ளி, நிர்மலா மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியரின் ஓவியம், பார்வையாளர்களை கவர்ந்தது.
11:10 AM | | 0 Comments
கவர்ச்சி விளம்பரங்களில் ஏமாறக் கூடாது!
குன்னூர் : "இலவசம், பரிசு, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து பொருள் வாங்குவது நுகர்வோரின் கடமை' என, நுகர்வோர் மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றக் கூட்டம் நடத்தப்பட்டது.
குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சபாபதி, சிறப்பு விருந்தினராக பேசியதாவது: ஒவ்வொரு நுகர்வோருக்கும் பாதுகாப்பு, தகவல் பெறுவது, தேர்வு செய்வது, முறையிடுவது, குறை தீர்ப்பது, நுகர்வோர் கல்வி பெறுவது, தூய்மையான சுற்றுச்சூழலை பெறுவது, அடிப்படை தேவைகளை பெறுவது என பல உரிமைகளை, 1986ம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழங்கியுள்ளது.
அன்றாட வாழ்வில் நமக்குள்ள பாதுகாப்பு உரிமைகளை, நுகர்வோர் அறியாமல் இருப்பதால், "டிவி' மற்றும் ஊடகங்களில் வரும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், தள்ளுபடி போன்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, உடலுக்கு கேடு விளைவிக்கும் மற்றும் பாதுகாப்பற்ற பொருட்களை வாங்குகின்றனர்.
தேவையற்ற செலவுகளை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; தேவைக்கு மீறி பொருள் சேர்க்கக் கூடாது; கவர்ச்சி விளம்பரங்களை நம்பக் கூடாது; பொருட்களை வாங்கும் போது, தரம், எடை, வீரியம், விலை, காலாவதி ஆகும் நாள் ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்; ஐ.எஸ்.ஐ., மற்றும் "அக்மார்க்' முத்திரையுள்ள தரமானப் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்; எந்தவொரு பொருள் வாங்கினாலும், ரசீது பெற வேண்டும்.
இலவசம், பரிசு, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற விளம்பரங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, ஒரு பொருளை வாங்குவதும், ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருப்பதும் நுகர்வோரின் கடமை. இவ்வாறு, சபாபதி பேசினார்.
கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியை சுஜாதா, ஊட்டி - குன்னூர் சாலையில் காணிக்கராஜ் நகர் சாலையில் ஏற்பட்ட பாதிப்பு, வழித்தடத்தில் "எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
நுகர்வோர் சங்க செயலாளர் சபாபதி, ""கடந்தாண்டு நவம்பரில் பொழிந்த மழையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட காணிக்கராஜ் நகர் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது; அதை கட்டிய கான்ட்ராக்டர் குறித்த விபரம், தரமானப் பொருட்களை கொண்டு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதா? என்ற விளக்கம், நீர் தேங்காமல் வடிகால் வசதியுடன் தடுப்புச் சுவர் அமைக்கப்படாததற்கான காரணம் என பல விளக்கங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின் கீழ் கேட்கப் பட்டுள்ளது.
ஊட்டி - குன்னூர் வழித்தடத்தில் "எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தில் பஸ் இயக்கக் கூடாது என்ற கோரிக்கையை, போக்குவரத்து கழக அதிகாரிகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என்றார்.
11:08 AM | | 0 Comments
இந்தியாவின் எதிர்காலம் மாணவர் கையில்: வங்கி அதிகாரி பேச்சு
ராசிபுரம்: ""இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன,'' என, ஞானமணி கல்லூரியில் நடந்த விழாவில், கரூர் வைஸ்யா வங்கி முதன்மை பொது மேலாளர் சுகுமார் பேசினார்.ராசிபுரம் ஞானமணி கல்லூரி வணிக மேலாண் துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது.
கல்லூரி நிறுவன தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன், நிர்வாக அதிகாரி பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மாலாலீனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கரூர் வைஸ்யா வங்கி முதன்மை பொது மேலாளர் சுகுமார் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கி பேசியதாவது:நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. அதுபோல் மாணவ, மாணவியர் தங்கள் அறிவுத்திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் உங்களை போன்ற மாணவர்களால் உருவாக்கப்பட்டது தான். தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் மாணவர்களே. இது இந்தியர்களின் அறிவாற்றலையும், தொழில் நுட்ப வளர்ச்சிøயும் காட்டுகிறது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி மாணவர் கையில்தான் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
10:40 AM | | 0 Comments
அண்ணாமலை பல்கலையில் புதிய படிப்புகள் அறிமுகம்
10:33 AM | | 0 Comments
பள்ளிகளில் கட்டாய காமிரா : போலீஸ் உத்தரவு
சென்னை: சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதால் நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும் என்றும் பள்ளிகளில் குழந்கைள் கடத்தலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
தீபாவளியையொட்டி சென்னை பூக்கடை பகுதியில் 28 இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு, 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் துவக்க விழா இன்று நடந்தது. கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது; பூக்கடையில் பத்திரியன் தெரு, பந்தர்தெரு, மலைய பெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, அமரசன் தெரு, பிராட்வே பஸ்நிலையம் உள்ளிட்ட 28 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை அமைத்துள்ளோம். தீபாவளி முடிந்த பிறகும் தொடர்ந்து இயங்கும். 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
கோயம்பேடு பஸ்நிலையத்தில் போலீசார் மாறு வேடத்தில் நின்று ஆய்வு செய்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்படுவார்கள். தி.நகரில் நேற்று ஒரு நாளில் 10 லட்சம் பேர் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்கி சென்றுள்ளனர். கோவையில் 2 குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து பள்ளிகளின் வாசல்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறோம்.
ஆனால் பல பள்ளிகளில் இன்னும் கண்காணிப்பு காமிரா பொருத்தவில்லை. எனவே கட்டாயம் கேமரா பொருத்த வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் பெற்றோர் சங்கங்களை அழைத்து பேச இருக்கிறோம். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
10:25 AM | | 0 Comments
தென்தமிழகத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு
தூத்துக்குடி : ""தென்தமிழகத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இதைப் பயன்படுத்தி, சூரிய ஒளி மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு உள்ளதாக,'' தமிழக அரசின் எரிசக்தி வளர்ச்சி முகமை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர், கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்தார். தூத்துக்குடியில் நேற்று, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக, "சூரிய சக்தியின் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் எட்வின் சாமுவேல் வரவேற்றார். அதன், சூரிய சக்தி பிரிவு தலைவர் ரமேஷ் கைமல் தலைமை வகித்தார்.
கருத்தரங்கில், கிறிஸ்துதாஸ் காந்தி பேசியதாவது: இன்னும் 20 முதல் 50 ஆண்டுகளில் நிலக்கரி இல்லாமல் போகலாம். எனவே, சூரியன் மற்றும் காற்றிலிருந்து அதிகளவு மின்சாரம் தயாரிப்பது அவசியம். தமிழகத்தில் நிலக்கரி, எரிபொருள் உள்ளிட்டவை மூலம், தற்போது 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், காற்றாலை மூலம் 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய ஒளிமூலம் இந்தாண்டு 1,000 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 10 ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது குறைவாக உள்ளது. இம்முறை, பெங்களூரில் அதிகம் உள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழகத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவுள்ளதால், இங்கு சூரியஒளியை பயன்படுத்தி அதிக மின்சாரம் தயாரிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.
இதுதவிர சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் , சூரிய நீராவி மூலம் சமைப்பது உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இயங்கும் பிரிஜ்ட்கள் தற்போது, தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளன. அங்கு, அவை மருந்துகளை பாதுகாக்க பயன்படுகின்றன. சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து அதை வீட்டு விளக்குகள், தெருவிளக்குகளில் பயன்படுத்தலாம். தேவையான உபகரணங்களைஅமைத்து சூரிய ஒளிமூலம், குறைந்தளவு 50 கிலோ வாட், 100 கிலோ வாட் முதல் ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கலாம். இதுபோல, ஊராட்சியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இவற்றிக்காக, குறிப்பிட்ட அளவு தொகை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம், என்றார்.
10:24 AM | | 0 Comments
இருபதாயிரம் பெண்களுக்கு இலவச கல்வி : துணைவேந்தர் கல்யாணி தகவல்
மதுரை : ""தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 20 ஆயிரம் பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட உள்ளது,'' என துணைவேந்தர் ஏ.கல்யாணி தெரிவித்தார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எட்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், தற்போது மூன்று லட்சம் பேர் படிக்கின்றனர். இப்பல்கலையில் 133 சமுதாயக் கல்லூரிகள் உள்ளன. 90 படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்பல்கலைக்கு சென்னை சைதாப்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் உருவாகிறது. டிசம்பர் முதல் பல்கலை அங்கு இயங்கும். இப்பல்கலையின் டிப்ளமோ தொழிற் படிப்புகளில் 50 ஆயிரம் பேர் படிக்கின்றனர். முடிதிருத்துவோர் ஐந்தாயிரம் பேருக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்துள்ளோம். விரைவில் சான்றிதழ், கருவிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
பல்கலையின் 90 படிப்புகளுக்கும் பாடத்திட்டங்களை குறுந்தகடுகளில் தயாரித்துள்ளோம். பதினோறு பல்கலைகளின் ஒத்துழைப்புடன் 11 மையங்கள் செயல்படுகின்றன. விரைவில் டெலிகான்பரன்சிங் முறையில் இம்மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவோம். தமிழில் படிப்போருக்கு 25 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச கல்வி அளிக்கிறோம். இந்த ஆண்டே விதவைகள், பெற்றோர் ஆதரவை இழந்த 20 ஆயிரம் பெண்களுக்கு சமுதாய கல்லூரிகள் மூலம் இலவச கல்வி அளிக்க உள்ளோம். தொலைநிலைக் கல்வி கவுன்சில் நிதியின் கீழ் இது செயல்படுத்தப்படும். இவ்வாறு கல்யாணி கூறினார்.
10:20 AM | | 0 Comments
மனிதனின் பெருமை பதவியில் இல்லை: ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பேச்சு
கோவை : ""ஒரு மனிதனின் பெருமை, அவன் வகிக்கும் பதவியில் இல்லை; அந்த பதவியை கொண்டு அவன் சேவையில் இருக்கிறது,'' என, ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் பேசினார்.
பணியில் சிறந்த போலீசாருக்கு விருது வழங்கும் விழா கோவை ரோட்டரி கிளப் சார்பில், தொழில் மற்றும் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. போலீசாருக்கு விருது வழங்கி, தேசிய மின், ஆற்றல் மற்றும் இயற்கை வாயு தீர்ப்பாயம் தலைவரும், ஜார்க்கண்ட் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுமான கற்பகவிநாயகம் பேசியதாவது:ஐ.ஜி., அந்தஸ்தில் இருப்பவர்கள், "ஏசி' அறையில் இருந்து கொண்டு உத்தரவு பிறப்பிக்கலாம். களத்தில் பணியாற்றுவது கீழ்நிலை காவலர்கள்தான். அவர்கள் நினைத்தால் சிவில் வழக்கை கிரிமினல் வழக்காகவும், கிரிமினல் வழக்கை சிவில் வழக்காகவும் மாற்ற முடியும். சாதாரண கான்ஸ்டபிளாக இருந்தாலும், சிறந்த கான்ஸ்டபிள் என்ற பெயர் பெற முயற்சிக்க வேண்டும்.போலீசார் நினைத்தால் ஒரு பிரச்னையை சுமுகமாக தீர்க்கவும் முடியும்; ஒரு பிரச்னையை உருவாக்கவும் முடியும். நேர்மையாக பணியாற்றினால், ஓய்வு காலம் நிம்மதியாக இருக்கும். போலீசாரின் குழந்தைகள் மதிக்கப்படுவார்கள்; சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் மதிப்பையும் பெற முடியும்.காற்றை எதிர்த்து போராடியே காற்றாடி சுழல்கிறது; விண்ணை எதிர்த்து போராடியே விமானம் பறக்கிறது. மண்ணை எதிர்த்துப் போராடியே விதை முளைக்கிறது;
அலைகளை எதிர்த்துப் போராடியே ஓடம் நகர்கிறது. அநியாயத்துக்கு எதிராக போராடினால்தான் உலகம் அங்கீகரிக்கும். போராடும் குணம் என்பது, நம் உணர்வோடு ஒன்றித்திருக்க வேண்டும். குடும்பங்களை சேர்க்கவும், பிரிக்கவும் போலீசாரால் முடியும். அதற்காக கட்ட பஞ்சாயத்து செய்யாதீர்கள்; கனிவான பஞ்சாயத்து செய்யுங்கள். இன் றைக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் பணிக்கு செல்லுங்கள். இன்று வீட்டுக்கு ஏதாவது கொண்டு போக வேண்டுமென்று பணியாற்றாதீர்கள். எங்கே, எந்த சூழலில் பணியாற்றினாலும் நேர்மையாக இருங்கள்.நமது கரங்கள், பாறையை தூக்கும்போது பாறையாகவும், மலர்களை தூக்கும்போது மலர்களாகவும் இருக்க வேண்டும்; அதேபோல, ரவுடிகளைக் கையாளும்போது நீங் கள் ரவுடிகளாக மாறுவதில் தவறில்லை. சாதாரண மனிதர்களை கையாளும்போது, சாதாரண மனிதராக மாற வேண்டும். காக்கிச்சட்டை அணியும் போது, இதயத்தை கழற்றி வைக்க வேண்டுமென்ற வாக்கை நீங் கள் பொய்யாக்க வேண்டும்.
போலீசார் நேர்மையாய் இருப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால், நீங்கள் நேர்மையாக இருப்பது தெரிந்தால் உங்கள் மேலதிகாரியே உங்களை நிர்ப்பந்திக்க மாட்டார். சட்டத்தையும், மனசாட்சியையும் விட யாரும் பெரியவர் இல்லை. ஓய்வு பெறுவதற்கு முன், "எப்ப போவான்' என்று யாரும் நினைக்காமல், "நீங்க போறீங்களா...' என்று கவலையோடு கேட்டால், அதுதான் உண்மையான விருது.காவல்துறையில் கெட்ட விஷயங்களைச் செய்யும் சூழல் நிறைய வரும். நல்லவர்களை கைது செய்ய வேண்டியிருக்கும். எல்லா வழக்குகளும் ஜெயித்து விடாது; அதற்காக நம் முயற்சியைக் கை விட்டு விடக்கூடாது. முயற்சி மட்டுமே நம் கையில்; முடிவு ஆண்டவன் கையில். குறிக்கோள், உழைப்பு, முயற்சி, ஒழுக்கம், அடக்கம் இருந்தால் எந்தத் துறையிலும் தலைமையிடத்துக்கு வர முடியும்.சான்றிதழுக்காக வேலை செய்தால் அந்த வேலையை நன்றாக செய்ய முடியாது; வேலையை நன்றாகச் செய்தால், சான்றிதழ் தானாக வரும். ஒரு மரத்தின் பெருமை, உயரத்தில் இல்லை; அதன் பலனில் இருக்கிறது. ஒரு மலரின் பெருமை, அதன் நிறத்தில் இல்லை; மணத்தில் இருக்கிறது. ஒரு மனிதனின் பெருமை, பதவியில் இல்லை; பதவியைக் கொண்டு அவன் சேவை செய்வதில் இருக்கிறது.இவ்வாறு, நீதிபதி கற்பகவிநாயகம் பேசினார்.
ரோட்டரி மாவட்ட இயக்குனர் (வொகேஷனல் சர்வீஸ்) விஸ்வநாதன், திட்ட தலைவர் சுந்தரவடிவேலு, ரோட்டரி கிளப் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், எஸ்.ஐ.,க்கள் சந்திரமோகன், ஸ்ரீமதி, சுரேஷ் உள்ளிட்ட போலீசார் விருது பெற்றனர்.
அந்த மாணவன்...!முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் பேசுகையில், ""அந்தக் காலத்தில், எஸ்.ஐ., ஆக இருப்பவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் ஊரே அவரை வணங்கும். அதைப் பார்த்து எஸ்.ஐ., ஆக வேண்டுமென்று பள்ளி பருவத்திலேயே நினைத்த ஒரு மாணவன், அதற்காக முயற்சித்து எஸ்.ஐ., தேர்வுக்கு போனபோது மார்பளவில் ஒரு இன்ச் குறைவாக இருந்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் மேலும் படித்து வக்கீலாக, தலைமை நீதிபதியாகி இன்று உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறான்,'' என்றார். அப்போது, அரங்கிலிருந்த போலீசார், ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் அரங்கம் அதிர கரவோசை எழுப்பினர்.
10:11 AM | | 0 Comments
2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : வரும் மூன்று மாதங்களில் உருவாகும்
புதுடில்லி : "உணவுப் பொருள் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வு போன்ற பிரச்னைகள் இருந்த போதிலும், இந்தியாவில் வேலைவாய்ப்புத் துறையில் திருப்திகரமான நிலைமை இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் சுகாதாரம், ஐ.டி., உள்ளிட்ட ஆறு துறைகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன' என்று பிரபல தொழிற்சேவை ஏஜன்சியான, "எர்னஸ்ட் அண்ட் யங்' நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வுகள் அவ்வப்போது வெளியிடப்படுவதை வைத்து, அங்கே மொத்த வளர்ச்சி குறித்த மதிப்பீடு செய்யப்படும்.மேலும், ரிசர்வ் வங்கி அடுத்த இரு நாட்களில் அறிவிக்க இருக்கும் வட்டி விகிதம் கடன் வசதிக் கொள்கையில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதை பிரதிபலிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் பிரணாப், நேற்று தன் சொந்த ஊரான ஜாங்கிபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும், அதே சமயம் வளர்ச்சி தொடரும் வகையிலும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை அமையும்' என்று கூறியுள்ளார்.மேலும், வேலைவாய்ப்பு இனி நாட்டில் அடுத்த மூன்று மாதங்களில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இத்துறையில் வல்லுனரான, "எர்னஸ்ட் அண்ட் யங்' அமைப்பின் இந்தியப் பிரிவின் தலைவர் என்.எஸ்.ராஜன் கூறியதாவது: இந்தியாவில் பொருளாதாரம் நிலையாக உள்ளது. அதன் அடையாளமாக மொத்த வளர்ச்சி அதிகரித்து வருகிறது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இந்திய நிறுவனங்கள், அதிகளவில் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளன.சுகாதாரம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) மற்றும் அதைச் சார்ந்த துறைகள், கல்வி மற்றும் பயிற்சி, உற்பத்தி, வங்கி நிதிச் சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் (பி.எப்.எஸ்.ஐ.,) என ஆறு துறைகளில் மொத்தம் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் இன்னும் மூன்று மாதங்களில் உருவாகும் .சுகாதாரத் துறையில் 60 ஆயிரம், ரியல் எஸ்டேட்டில் 50 ஆயிரம், கல்வி மற்றும் பயிற்சித் துறையில் 30 ஆயிரம், உற்பத்தி மற்றும் பி.எப்.எஸ்.ஐ., துறைகளில் தலா 20 ஆயிரம் என மொத்தம் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இதனால் கிடைக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு ஐந்து லட்சம் பணியாளர்கள் தேவை.பொதுத் துறை நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளன. இந்த அளவு வேலைவாய்ப்பு ஏற்படும் என்பதற்கு காரணம், இந்திய மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம், கிராமங்களில் அரசுத் திட்டங்களால் ஏற்பட்ட வளர்ச்சி ஆகும். அதே சமயம், கல்வித் துறையில் அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
9:49 AM | | 0 Comments
சுற்றுலா தகவல்களுக்கான வலைப்பூ - தங்களது பார்வைக்காக..
வலைப்பூ உலகில் கல்வித் தகவல் மூலம் பல்வேறு செய்திகளை வழங்கி வருகிறோம்.
அத்துடன் தற்பொழுது சுற்றுலா குறித்த தகவல்கள் மற்றும் செய்திகளை வழங்கும் விதமாக
நன்றி!
9:19 AM | | 0 Comments