ஓசூரில் ஆக.,1ம் தேதி செஸ் சாம்பியன் போட்டி

ஓசூர்: ஓசூர் செஸ் அகாடமியில் 121வது குழந்தைகள் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி வரும் 1ம் தேதி நடக்கிறது. ஓசூர் செஸ் அகாடமி நிறுவன தலைவர் ஜெயபாலா சென்னாசெட்டி வெளியிட்ட அறிக்கை: ஓசூர் பை-பாஸில் உள்ள செஸ் அகாடமியில் வரும் 1ம் தேதி 121வது குழந்தைகள் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடக்கிறது. போட்டிகள் ஏழு வயதுக்குட்பட்டோர், ஒன்பது வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர் மற்றும் 15 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

காலை 8 மணிக்கு போட்டிகள் துவங்கி விடும். போட்டிகளில் பங்கேற்பதற்கு நுழைவு கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாவட்ட, மாநில போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுவர். போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் மேலும் தகவல் பெற 094865 - 93322, 04344-242019 ஆகிய  எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

0 comments: