திருச்சி மாவட்டத்தில் 12 புதிய பள்ளிகள் துவக்கம்

திருச்சி: திருச்சி மாவட்ட கலெக்டர் (பொ) ராமன் வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் முசிறி ஒன்றியத்தில் பஞ்சாம்பட்டி, வையம்பட்டி ஒன்றியம் மீனாட்சியூர், தெற்கு அம்மாபட்டி, கூடத்திப்பட்டி, கடப்பமரத்துப்பட்டி. மணப்பாறை ஒன்றியத்தில் தாதநாயக்கன்பட்டி, படுகளம் பூசாரிப்பட்டி, பொன்னுச்சங்கம்பட்டி, பெம்மம்பட்டி, மருங்காபுரி ஒன்றியத்தில் பீரங்கிமேடு, மான்பாஞ்சாம்பட்டி, காடையம்பட்டி ஆகிய இடங்களில் 12 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.

துறையூர் ஒன்றியம் மதுராபுரி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தில்லாம்பட்டி, லால்குடி ஒன்றியம், தெற்குசத்திரம், அகலங்கநல்லூர் புதுத்தெரு, நத்தமாங்குடி, வையம்பட்ட ஒன்றியம் பாம்பாட்டிப்பட்டி, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் காமாட்சிபுரம், மணிகண்டம் ஒன்றியத்தில் ஒலையூர், எம்.ஜி.ஆர்., நகர், யாகப்புடையான் பட்டி, மட்டப்பாறைப்பட்டி. மருங்காபுரி ஒன்றியத்தில் பில்லுப்பட்டி, சொக்கம்பட்டி, முசிறி ஒன்றியத்தில் மேலக்கொட்டம், சின்னகொடுந்துறை என மொத்தம் 15 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

 

0 comments: