மாநில விளையாட்டு போட்டி:நுண்ணறிவு பிரிவு ஏ.சி.,2 பிரிவுகளில் சாம்பியன்

திருச்சி: திருச்சியில் மாநில போலீஸ் விளையாட்டு போட்டி கடந்த 26ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் இறகு பந்து போட்டியில் டி.எஸ்.பி., மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான இறகு பந்துபோட்டி தென்னூர் உழவர் சந்தை அடுத்துள்ள அண்ணாநகர் உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

நேற்று முன்தினம் மாலை இறகு பந்து போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடந்தது. திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு ஏ.சி., கண்ணன் மற்றும் டி.எஸ்.பி., தொல்காப்பியன் ஜோடி, டி.எஸ்.பி.,க்கள் ராஜசேகரன், தங்கவேல் ஜோடியை எதிர்கொண்டது.விறுவிறுப்பாக நடந்த போட்டியில் ஏ.சி., கண்ணன், தொல்காப்பியன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.நேற்று மாலை போலீஸ் உயர் அதிகாரிக்கான பிரிவு இறகுபந்து ஒற்றையர் போட்டியின் இறுதிப்போட்டி தென்னூர் உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு ஏ.சி., கண்ணனும், டி.எஸ்.பி., தங்கவேலும் மோதினர்.போட்டியை மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள் துவக்கிவைத்தார். பரபரப்பான ஆட்டத்தில் ஏ.சி., கண்ணன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.போலீஸ் உயர் அதிகாரிக்கான இறகு பந்து போட்டி ஒற்றையர், இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்ற ஏ.சி., கண்ணன் மற்றும் டி.எஸ்.பி., தொல்காப்பியனுக்கு முக்கிய போலீஸ் அதிகாரிகளும், போலீஸ் துறை அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்

 

0 comments: