"போட்டிகள் நிறைந்த உலகில், சாதனைப் படைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர்,''
குன்னூர்:""போட்டிகள் நிறைந்த உலகில், சாதனைப் படைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர்,'' என, மாவட்ட கலெக்டர் நம்பிக்கை தெரிவித்தார்.குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், நேற்று பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் மரிய கொரட்டி வரவேற்றார்.மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், சிறப்பு அழைப்பாளராக, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில், ""பட்டம் பெறும் மாணவியர், தங்கள் எதிர்கால வாழ்க்கையை திறம்பட நிர்ணயம் செய்து கொள்ள, சிறந்த துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினர், தோல்விகளை ஒப்புக் கொள்வதில்லை; இந்த மனநிலையை தவிர்த்து, எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கல்வி பயில வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில், சாதனைப் படைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். கல்வியோடு பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.பாரதியார் பல்கலைக் கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவியர் எழிலரசி, சாம்சன் லஹார், வத்சலா, சரண்யா, நித்யா, கிருத்திகா, ÷ஷாபா உட்பட 240 மாணவியர் சான்றிதழ் பெற்றனர். கல்லூரி துணை முதல்வர் ஷீலா நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment