மாநில கால்பந்து போட்டி துவக்கம்:பாளை., தூத்துக்குடி பள்ளி அணிகள் வெற்றி

திருநெல்வேலி:பாளை. யில் துவங்கிய மாநில கால்பந்து போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் பாளை., தூத்துக்குடி பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.கிரிக்கெட்டுக்கு இணையாக கால்பந்து, ஹாக்கி மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பாளை. சேவியர் பள்ளியில் ஆண்டுதோறும் அருட்தந்தை லெவே நூற்றாண்டு நினைவு பள்ளி மாணவர் மாநில கால்பந்து போட்டிகள் நடக்கிறது. இந்த ஆண்டு போட்டிகள் நேற்று துவங்கின. 15 அணிகள் பங்கேற்கின்றன.துவக்க விழாவிற்கு சேவியர் கலைமனைகள் இல்ல அமைச்சர் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார்.

அன்னமேரிபாப்பு துவக்கிவைத்தார். பாரத ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் லாசர் ஜெயப்பிரகாஷ், திரு இருதய சகோதரர்கள் சபை தலைவர் ஜேசுதாஸ், செஞ்சிலுவைச்சங்க செயலாளர் பிரபாகர், முன்னாள் மாணவர்கள் வி.கே.பி.சங்கர், மணி, ஜூடு உட்பட பலர் கலந்துகொண்டனர்.தலைமையாசிரியர் யாகு நன்றி கூறினார்.முதல் நாளான நேற்று நான்கு போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பள்ளி அணி 3-1 கோல்கணக்கில் நெல்லை சாப்டர் பள்ளி அணியை வென்றது.

இரண்டாம் போட்டியில் தூத்துக்குடி தோமையார் மெட்ரிக் பள்ளி அணி 4-3 கோல்கணக்கில் தேவக்கோட்டை டி.பிரிட்டோ பள்ளி அணியை வென்றது.மூன்றாம் போட்டியில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் பள்ளி அணி 4-0 கோல்கணக்கில் நல்லூர் மேற்கு திருநெல்வேலி பள்ளி அணியை வென்றது. நான்காம் போட்டியில் பாளை. சேவியர் பள்ளி அணி 4-0 கோல்கணக்கில் தூத்துக்குடி தோமையார் பள்ளி அணியை வென்றது.இன்று போட்டிகள் தொடர்ந்து நடக்கிறது. நாளை இறுதிப்போட்டி, பரிசளிப்பு விழா நடக்கிறது.

 

0 comments: