அகில இந்திய தரைப்படை மாணவர் பயிற்சி முகாமுக்கு தேர்ச்சிப்பெற்ற திருச்சி என்.சி.சி., மாணவருக்கு பாராட்டு
திருச்சி: டில்லியில் நடக்கும் அகில இந்திய தரைப்படை மாணவர் பயிற்சி முகாமுக்கு தேர்ச்சிப்பெற்ற திருச்சி என்.சி.சி., மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.
மதுரையில் திருச்சி 2 (டி.என்) கவசப்படை என்.சி.சி., மாணவருக்கான, மாநில அளவிலான பயிற்சி முகாம் நடந்தது. திருச்சி மண்டலத்தில் இருந்து 5 ஜூனியர் மாணவர் உட்பட 20 மாணவர் பங்கேற்றனர். தடைத்தாண்டி ஓட்டத்தில் மாணவர் சாம்ராஜூம், துப்பாக்கி சுடும் போட்டியில் சின்னப்பராஜூம் தங்கப்பதக்கம் பெற்றனர். திருச்சி குரூப் மாணவர்கள் தமிழக அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். வரும் செப்.,ல் டில்லியில் நடக்கும் அகில இந்திய தரைப்படை மாணவர் பயிற்சி முகாமில் பங்கேற்க தகுதிப்பெற்றனர். அம்மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
திருச்சி குரூப் கமாண்டர் சேத்தன் பேசுகையில், ""கடினமான போட்டியில் மிகத் திறமையாக விளையாடி வெற்றிபெற்று இருக்கிறீர்கள். டில்லியில் நடக்கும் அகில இந்திய தரைப்படை மாணவர் பயிற்சி முகாமுக்கு செல்லவிருக்கும் உங்களை வாழ்த்துகிறேன். தொடர்ந்து இரு ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருச்சி குரூப் தக்க வைத்துள்ளது. முகாமில் பங்கேற்ற 20 மாணவருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். உங்களால் எங்களுக்கும், பெற்றோருக்கும், நாட்டுக்கும் பெருமை,'' என்றார். விழாவில், லெப்டினன்ட் கர்னல்கள் பிரகாஷ் தரண், தாமஸ், விங் கமாண்டர் எம்.எஸ்., ராவ், ரேஹீனா பர்வீன், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment