தவில் இசை சாதனை நிகழ்ச்சி: இசைப்பள்ளி ஆசிரியர் முயற்சி

கரூர்: "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் பதிவு பெறுவதற்காக 24 மணிநேரம்தொடர்ந்து தவில்இசைக்கும் சாதனை நிகழ்ச்சி கரூரில் 31ம் தேதி நடக்கிறது.

கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தவில் ஆசிரியர் ஜெயராஜ், நடத்தும் 24 மணிநேர தவில் இசை நிகழ்ச்சியை, கரூர் ரோட்டரி குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. 31ம் தேதி மாலை 5.45 மணிக்கு துவங்கி, மறுநாள் மாலை 6 மணிக்கு முடிக்கிறார். கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி சாதனை நிகழ்ச்சியை துவக்கிவைக்கிறார். தவில் ஆசிரியர் ஜெயராஜுடன், சாக்ஸஃபோன் ஆனந்த், தேவாரம் குமார், வயலின் சத்தியமூர்த்தி, வீணை ஸ்ரீநிதி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட இகைலைஞர்கள் பங்கேற்கின்றனர். சாதனை முடிக்கப்பட்டதும், "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பின் க்ரிபான்ஷ் க்ரோவர், சாதனை பதிவை பத்திரம் வடிவில் அளிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக மதுரை ஆதீனம் பங்கேற்கிறார்.

 

0 comments: