ஹெல்மெட் அலாரம் மாணவிக்கு பரிசு

மதுரை: மதுரை யாதவர் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், எஸ்.இ.வி., மெட்ரிக்., பள்ளி மாணவி சவுந்தர்யா தேவியின் "ஹெல்மெட் அலாரம்' என்ற புதிய கண்டுபிடிப்புக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி, கண்காட்சியில் டூவீலர் ஓட்டுனர்கள் பயன்படுத்துவதற்கான "ஹெல்மெட் அலாரம்' என்ற புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினார். டூவீலரை ஸ்டார்ட் செய்ததும், ஹெல்மெட் அணியாமல் இருந்தால், அலாரம் அடிக்கும். இந்த கண்டுபிடிப்பு கண்காட்சியில் 2ம் இடம் பெற்றது. மாணவியை பள்ளி முதல்வர் அய்யப்பன் பாராட்டினார்.

 

0 comments: