தரமான கல்வி அளிக்க திறமையான ஆசிரியர்கள் தேவை

திருச்செங்கோடு, ஜூலை 30: தரமான தொழில் நுட்பக் கல்வியை அளிக்க திறமையான ஆசிரியர்கள தேவை என்று கோவை அண்ணா பல்கலை. துணைவேந்தர்  கருணாகரன் கூறினார்.


  திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்த பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத் திட்டம் எதுவும் இந்த வருடம் அறிமுகப்படுத்தவில்லை.  தேர்வுகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சுமார் 500 பொறியில் கல்லூரிகள் உள்ளன. கோவை அண்ணா பலகலைக்கழகத்தின் கீழ்  மட்டும்  165 கல்லூரிகள் இருக்கின்றன.

தமிழகத்தின் மக்கள்தொகை அடிப்படையில் தேவையை மீறி  பொறியியல் கல்லூரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு காரணம் தமிழக மாணவர்கள்  மட்டுமின்றி, பிற மாநிலங்களைச்  சேர்ந்தவர்களும்,  வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து படிப்பதே காரணம்.

  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொறியியல் துறையே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வளவு கல்லூரிகள் தமிழகத்தல் இருப்பதால் திறமையான, தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.  

தகுதியான ஆசிரியர்களை  உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் முயற்சிகள்  மேற்கொள்ளும். லட்சக்கணக்கான பொறியாளர்கள் ஆண்டு தோறும் வெளிவருவதால்  அவர்களுக்கு நல்லவேலை கிடைப்பது மிக முக்கியம். அதற்காக அண்ணா பல்கலை.  பல்வேறு தொழில் துறையினரை வரவழைத்து வளாகத் தேர்வுகள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 தமிழ் வழியில் படிக்க ஆர்வம் கூடி வருகிறது. அதற்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன என்றார் 

 

0 comments: