அரசு மாமன்னர் கல்லூரியில்கணினி அறிவியல் ஆய்வு மையம் திறப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் ஆய்வு மையத்தை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.புதுக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மாமன்னர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.கம்ப்யூட்டர் பாடப் பிரிவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன கம்ப்யூட்டர்கள் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அறிவியல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஷ்வநாதன் தலைமை வகித்தார். முதல்வர் சேதுராமன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின் கம்ப்யூட்டர் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார். பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணிவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.கல்லூரிக்கு வந்த துணை முதல்வரை மாணவ, மாணவிகள் வரிசையாக அணிவகுத்து நின்று மலர்தூவி வரவேற்றனர். என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

 

0 comments: