அழகப்பா பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

காரைக்குடி: அழகப்பா பல்கலை, சென்னை தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப கழகம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளது. துணைவேந்தர் ராமசாமி முன்னிலை வகித்தார். பதிவாளர் செண்பகவல்லி, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப கழக முதன்மை செயல் அலுவலர் சிவக்குமார் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின்படி, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப கழகம் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கும். கருத்தரங்கு, கருத்துப் பட்டறை, பல்கலை மற்றும் இணைப்பு கல்லூரிகளின் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு உதவிகளை வழங்கும். 
நிதி உதவி கோரும் ஆராய்ச்சி திட்டங் களுக்கு இணையதளத்தின் மூலம் விபரங்கள் பெறலாம்.சிண்டிகேட் உறுப்பினர் காசிநாதன், பேராசிரியர்கள் சுடலைமுத்து, செல்வம், நடராஜன், தேர்வாணையர் மாணிக்கவாசகம், கல்லூரி டீன் குருமூர்த்தி பங்கேற்றனர்.


 

0 comments: