பள்ளி நேரங்களில் மாணவருக்கு உதவும் போக்குவரத்து பணியாளர்

மதுரை:மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, அரசு போக்குவரத்து அதிகாரிகள் பள்ளி அருகில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் 605 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பள்ளி மாணவ, மாணவியருக்கு 1.68 லட்சம் இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது.மாணவ, மாணவியர் பஸ்சில் ஏற முயற்சிக்கும் போது சிரமங்களை தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகள், பணியாளர்களைக் கொண்டு ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக அனைத்து கிளை மேலாளர் களும், ஒவ்வொரு பள்ளியை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் உதவியாளர்களுடன் சென்று, பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் பஸ்ஸ்டாப்புகளில் நின்று மாணவர்களை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். மேலும் இந்த நடவடிக்கைகளை தொடர பள்ளியில் உள்ள என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஸ்கவுட் இயக்கத்தையும் ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்களை வலியுறுத்தி உள்ளனர்.

 

0 comments: