புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி 30ம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று நாள் நடக்கிறது.

மாவட்ட இறகுப்பந்து கழகம், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறவுள்ள இந்த போட்டி புதுக்கோட்டை நியு மோடி பேட்மின்டன் கிளப்பில் நடக்கிறது. 13 மற்றும் 16 வயதுகுட்பட்ட ஆண் ஓற்றையர், இரட்டையர், பெண் ஒற்றையர், இரட்டையர், 45 வயதுகுட்பட்ட ஆண்கள் இரட்டையர் என ஒன்பது பிரிவுகளில் போட்டி நடத்தப்பட உள்ளது. முதல் பரிசுபெறும் அணிகள் மற்றும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், பங்கேற்க விரும்பும் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து விளையாட்டு வீர ர், வீராங்கனை மற்றும் அணிகள் நியு மோடி பேட்மின்டன் கிளப்பை தொடர்புகொண்டு பெயர் பதிவு செய்யவேண்டும். போட்டி ஏற்பாட்டை அமைப்பாளர் செந்தில், செயலாளர் குமார், பொருளாளர் சையது முகம்மது செய்துள்ளனர்.

 

0 comments: