கரூர் புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்கு
கரூர், ஜூலை 29: கரூர் புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
செட்டிநாடு சிமென்ட் ஆலை நிறுவனத் தலைமை இயக்குநரும், கல்லூரியின் உதவித் தலைவருமான எம்.ஏ.எம்.ஆர். முத்தையா தலைமை வகித்தார்.
அமெரிக்க ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமஸ் எச். லீ கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். வடக்கு டெக்ஸôஸ் பல்கலைக்கழக எலக்ட்ரிக்கல், இன்ஜினியரிங் பிரிவுப் பேராசிரியர் சுமேஷ்நமுதுரை, லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக கணினி அறிவியல் பிரிவுத் தலைவர் எஸ். சீத்தாராமன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேப்பிங்சூ, வடக்கு டெக்ஸôஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பில்.பி. பக்ல்ஸ், சியாஹூய்யுவான், ஆர்கன் ஸ்டேட் பல்கலைக்கழக பெல்லாபோஸ் உள்ளிட்டோர் பேசினர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.பி. கபிலன் தெரிவித்தது:
இந்தக் கருத்தரங்கில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த சுமார் 1000 ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து 250 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை அளித்தோர் நேரடியாகவும், விடியோ கான்பரன்ஸிங் மூலமாகவும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களின் ஆற்றலை மேம்படுத்த வாய்ப்பாக அமையும். இந்தக் கருத்தரங்கு ஜூலை 30,31 ஆகிய நாள்களிலும் நடைபெறுகிறது என்றார் அவர்.
கல்லூரி முதல்வர் ஏ.பி. கபிலன் வரவேற்றார். செட்டிநாடு சிமென்ட் ஆலையின் செயலர் ஏ. சுப்பிரமணியன் நன்றி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment