நூலகப் போட்டியில் போட்டியில் குளித்தலை மாணவர்சிறப்பிடம்

குளித்தலை, ஜூலை 31: "நமது உலகம் நூலகம்' போட்டியில் குளித்தலை மாணவர் மெ. ஷேக்ரஹ்மான் 3-வது பரிசைப் பெற்றார்.

  தமிழ்நாடு பொது நூலக இயக்ககம் சார்பில் நமது உலகம் நூலகம் என்ற தலைப்பில் மாநில அளவிலான போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

  இந்தப் போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாட்டிற்கும், 2 ஆம் இடம் பெறுவோர் இந்திய அளவிலும், 3 ஆம் இடம் பெறுவோர் தமிழக அளவிலும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  கரூர் மாவட்ட அளவிலான தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் மெ. ஷேக்ரஹ்மான் கரூர் மாவட்டம் சார்பில் பேச்சுப் போட்டியில் 3-வது இடத்தைப் பெற்றார். இதன் மூலம், தமிழகச் சுற்றுலாவிற்கும் இவர் சென்று வந்தார்.

  இந்த மாணவனுக்கான பாராட்டு விழா குளித்தலை கிளை நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி தலைமை வகித்து மாணவருக்குச் சான்றிதழ், நினைவுப்பரிசுகளை வழங்கிப் பேசினார்.

  கிளை நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கருப்பையா வாழ்த்தினார். மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவகுமார் நிகழ்ச்சியை தொகுத்தார்.

  நிகழ்ச்சியில் குளித்தலை கோட்டாட்சியர் எஸ். பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் எம். ஜெயமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம். லீலாகுமார், தமிழாசிரியர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மாவட்ட நூலக அலுவலர் ஜெ. கார்த்திகேயன் வரவேற்றார். கிளை நூலகர் அ. தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

 

0 comments: