விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ரோவர் கல்லூரி மாணவர்களை தாளாளர் வரதராஜன் பாராட்டினார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ரோவர் கல்லூரி மாணவர்களை தாளாளர் வரதராஜன் பாராட்டினார்.தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.இதில், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி மாணவர் சூரியபிரகாஷ் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சூரியபிரகாஷ், தீரன், விக்னேஷ், சபுரிதீன் ஆகிய மாணவர்கள் மூன்றாமிடம் பெற்றனர்.மாணவி சங்கீதா 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், வட்டெரிதல் போட்டியில் மாணவி பிரேமா மூன்றாமிடத்தையும், 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் மாணவி தமிழ்மணி இரண்டாமிடத்தையும் பெற்றனர்.மாணவிகள் தமிழ்மணி, லலிதா, மணிமேகலை, சங்கீதா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம், நீச்சல் போட்டியில் லலிதா, பிரியா, கவிதா. உமா ஆகிய மாணவிகள் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி தாளாளர் வரதராஜன் பாராட்டினார். இயக்குநர் சுவாமிநாதன், முதல்வர் ஜோசப், துணை முதல்வர் லீமா பீட்டர், பி.ஆர்.ஓ., ராஜீ, அலுவலக மேலாளர் ஆனந்தன், உடற்கல்வி இயக்குநர் மகாலெட்சுமி உடனிருந்தனர்.

 

0 comments: