மருத்துவ ஆராய்ச்சி பயிற்சி மையம் கே.டி.வி.ஆர். குழுமம் துவங்குகிறது

கோவை:கே.டி.வி.ஆர். விஜயதீபா குரூப் சார்பில் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி, பயிற்சி வகுப்பு மையம் துவக்கப்படவுள்ளது.இது பற்றி கே.டி.வி.ஆர். குரூப் மருத்துவமனை இயக்குனர் சுந்தரமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் முன்னோடியாக திகழும் "கிளினிமைன்ட்ஸ்' அமைப்புடன் இணைந்து, ஆக.,14ம் தேதி புதிய பயிற்சி மையம் துவக்கப்படவுள்ளது. வேலாண்டிபாளையம் கே.டி.வி.ஆர். கார்டனில் இம்மையம் துவக்கப்படுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவக்கப்படவுள்ள இந்த பயிற்சி மையத்தில், ஆன்லைன் மற்றும் வகுப்பறைகள் வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்படும். இது தொடர்பாக கிளினிமைன்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரைவில் சென்னையிலும் ஒரு மையத்தை துவக்கவுள்ளோம். வரும் 2014ல் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுவர். இதற்கான பயிற்சி பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற கிளினிமைன்ட்ஸ் நிறுவனம் உதவும். மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி, பார்மசி, பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி மற்றும் அறிவியலைப் பாடமாக படித்த மாணவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். தேர்வு செய்யும் துறையின் அடிப்படையில், பயிற்சி வகுப்புகளின் காலம் மூன்று மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மாறுபடும். சான்றிதழ்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வழங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

0 comments: