இயற்கை பேரிடர் மேலாண்மைப் பயிற்சி
தருமபுரி, ஜூலை 30: தருமபுரி அரசு அதியமான் மேல்நிலைப்பள்ளியில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ரெட்கிராஸ் அலுவலர்களுக்கு இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
சங்கச் செயலர் கந்தசாமி தலைமை தாங்கினார். இயற்கை பேரிடர் காலங்களில் சேவையாற்றுவது குறித்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி என தலைமை ஆசிரியர்களுக்கும், ரெட்கிராஸ் அலுவலர்களுக்கும் விளக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் அரங்கநாதன், ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன், பாலக்கோடு மருத்துவர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment