வி.ஆர்.எஸ்., கல்லூரியில்கூட்டமைப்பு துவக்கம்

திருவெண்ணெய்நல்லூர்:அரசூர் வி.ஆர்.எஸ்., கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பின் செயல்பாடு துவக்க விழா நடந்தது.அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை கூட்டமைப்பின் செயல்பாடுகள் துவக்க விழா நடந்தது. கல்லூரியின் முதன்மை செயலாக்க அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். முதல்வர் அன்பழகன், துறைத்தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் செயலாளர் தமிழரசன் ஆண்டறிக்கை வாசித்தார்.புதுச்சேரி பொறியியல் கல்லூரியின் கணிப் பொறி துறை பேராசிரியர் ஜெயராஜ் கூட்டமைப்பை துவக்கி வைத்து "மென்பொருள் பொறியியலின் சவால்கள்' என்ற தலைப்பில் பேசினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட் பத் துறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய் திருந்தனர். மாணவர் அருண்ராஜ் நன்றி கூறினார்.

 

0 comments: