எங்கேயும், எப்போதும் மொபைல்போ

புதுடில்லி : இந்தியாவில் மொபைல்போன் சேவை தொடங்கி பதினைந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அப்போதைய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராமும், மறைந்த கம்யூ. (மா) கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசும் முதன்முதலாக மொபைல்போனில் பேசி இந்த சேவையை இந்தநாளில் துவக்கிவைத்தனர். ஒவ்வொரு மனிதனுக்கும் அவசிய தேவையான சொந்த வீடு, ஆரோக்கியமான உணவு, உடை இருக்கிறதோ இல்லையோ மொபைல்போன் அவசியமாக இருக்கிறது. அந்த அளவிற்கு தகவல் தொடர்புத்துறையில் புதிய புரட்சியை மொபைல்போன் ஏற்படுத்திவிட்டது. க்ஷ



15 ஆண்டுகளில் 63.5 சதவீத மக்கள் மொபைல்போன்களை சொந்தமாக வைத்துள்ளது வியக்கத்தக்க செய்தியாகும். டி.ஆர்.ஏ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவில் 635.51 மில்லியன் மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மாதாமாதம் 10 மில்லியன் புதிய மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் அல்லது சிம்கார்ட் வாங்குபவர்கள் அதிகரித்து உள்ளனர். சிம்கார்ட் நிறுவனங்களும் புதிய புதிய வசதிகளையும், விலை குறைப்பு, இலவசசேவை என கவர்ச்சிகரமான விளம்பரங்களை புகுத்தி வாடிக்கையாளர்களின் எல்லையை விரிவுபடுத்துகின்றன.



பேசுவதற்கு போன் என்ற நிலைமாறி, விளையாட்டு, இணையதள பயன்பாடு என்ற அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பேசுபவரின் முகத்தை பார்த்து பேசும் வசதி உள்ள 3ஜி இணைப்பு தான் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிக அளவில் 3ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையை பெற 74 மில்லியன் உபயோகிப்பாளர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



எங்கிருந்தும் எப்போதும் தகவல்களை தெரிவிக்கும் வகையில் இருப்பதால், மொபைல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும் மக்களுக்கு அது ஒரு கூடுதல் சுமையாக இருப்பதில்லை. மொபைல்போன் சுமையே சுகமாக இருக்கிறது என்று கூறும் அளவுக்கு அது நம் வாழ்க்கையில் ஒன்றி விட்டது என்றால் அது மிகையாகாது.

 

0 comments: