மாநில, மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை
புதுக்கோட்டை: மாநில, மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் கலந்துகொண்ட அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி விஜயலெட்சுமி மூவாயிரம் மீட்டர் மற்றும் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதே பள்ளி மாணவி சங்கீதா ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். இதுபோன்று புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான கோ-கோ, இறகுப்பந்து, சைக்கிள் போட்டிகளில் மாணவர்கள் ராஜேஷ்குமார், சரவணன், முத்துக்குமார், சரத்பாலா, அந்தோணி, செல்வம், உதயகுமார், கார்த்திக், சந்திரசேகரன், சத்தியமூர்த்தி ஆகியோரும், மாணவிகள் சேதுலெட்சுமி, சங்கீதா, ஜெயலெட்சுமி ஆகியோரும் முதலிடம் பெற்றுள்ளனர். சாதனை படைத்துவரும் மாணவர்களை பள்ளி முதல்வர் ராஜசேகரன், துணைமுதல்வர் முத்துக்குமரன், உடற்கல்வி இயக்குனர்கள் தங்கப்பன், சாமுவேல் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment