பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி


சென்னை, ஜூலை 30: அரசு பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளின் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம், பிரிட்டிஷ் கவுன்சில், யுனிசெஃப் ஆகியவற்றின் சார்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக வட்டார வள மையங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை முட்டுக்காடில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) தொடங்கி சனிக்கிழமை வரை 6 நாள்கள் நடைபெறுகிறது.

 

0 comments: