கலை பண்பாட்டு விருது: பத்து கலைஞர்கள் தேர்வு

விருதுநகர்:மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கான விருதுக்கு பத்து கலைஞர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 2008-09க்கான கலை இளமணியாக ஸ்ரீவில்லிப்புத்தூர் தபேலா கலைஞர் முருகலட்சுமி, கலை வளர்மணியாக மம்சாபுரம் தப் பாட்டக்கலைஞர் உமாராணி, கலை சுடர்மணியாக மேட்டமலை ராஜாராணி ஆட்ட கலைஞர் அ.ஆறுமுகம், கலை நன்மணியாக தொப்பலாக்கரை குறவன் குறத்தி ஆட்ட கலைஞர் எஸ்.கருணாநிதி, கலை முதுமணியாக ராஜபாளையம் மிருதங்க கலைஞர் ஏ.கே.கழுகுமலைராஜா ஆகியோர் தேர்வு பெற்றனர்.

2009-10க்கான கலை இளமணியாக ஸ்ரீவில்லிப்புத்தூர் குரலிசைக் கலைஞர் வெ.கிருத்திகா, கலை வளர் மணியாக ராஜபாளையம் கரகாட்ட கலைஞர் மு.அகத்தியன், கலை சுடர் மணியாக விருதுநகர் கிராமிய நடன கலைஞர் ஏ.கே.ரவி வர்மன், கலை நன்மணியாக ஏழாயிரம்பண்ணை உறுமிக்கலைஞர் எம்.ஆர்.கணேசன், கலைமுதுமணியாக ராஜபாளையம் குரலிசைக் கலைஞர் பெ.முத்துலட்சுமி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.

 

0 comments: