கல்விக்கடன்
8:20 AM | | 0 Comments
இன்றைய செய்திகள்
Aug 31, 2010
Aug 31, 2010
Aug 31, 2010
Aug 31, 2010
Aug 31, 2010
Aug 31, 2010
Aug 31, 2010
Aug 31, 2010
Aug 31, 2010
Aug 31, 2010
6:41 AM | | 0 Comments
தலைமை ஆசிரியர்களாக 273 பேர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
6:32 AM | | 0 Comments
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவருக்கு அரிய வாய்ப்பு
5:44 AM | | 0 Comments
பிளாஸ்டிக் பத்து ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட முடிவு
5:36 AM | | 0 Comments
2,000 ஆண்டு தொன்மை வாய்ந்த மலையாளம் : செம்மொழி அந்தஸ்துக்கு தகுதி படைத்தது
5:34 AM | | 1 Comments
ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் படிக்க...
சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவனில் ஜெர்மன் அகாதெமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் அமைப்பின் பிரிவு செயல்படுகிறது. ஜெர்மன் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்னதாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இ-மெயில்: daadch@vsnl.in
ஜெர்மன் கல்வி குறித்து விவரங்கள் அறிய உதவும் இணைய தளங்கள்:
www.campus-germany.de
www.daad.de
www.higher-education-campass.de
www.gateway-to-germany.de
www.student-affairs.de
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் படிப்பது குறித்து விவரங்கள் அறிய:
IDP Education Australia
28, Crystal Lawn, Wallace Garden
20, Haddows Road I Street
Nungambakkam, Chennai 600 006.
E-mail:info@chennai.idp.edu.au
ஆஸ்திரேலியக் கல்வி நிறுவனங்கள் குறித்த விவரங்களைக் கீழ்க்கண்ட இணைய தளம் மூலமும் அறியலாம்:
www.idp.com
5:28 AM | | 0 Comments
400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை
5:25 AM | | 0 Comments
பசிபோக்கும் மக்கள் இலக்கியம் மணிமேகலை: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
÷ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் 52-வது ஆண்டு விழாவில் நடைபெற்ற அமரர் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் நினைவு சொற்பொழிவு நிகழ்வில், மணிமேகலை மக்கள் இலக்கியம் எனும் பொருளில் அவர்
ஆற்றிய உரை:
÷சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இரட்டைக் காப்பியங்கள்தான். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தொடர்ச்சியான சம்பவங்களைக் கொண்டிருப்பதாலும், சிலம்பில் கூறப்பட்ட சில செய்திகள் மணிமேகலையிலும் வருவதாலும் அவை இரட்டைக் காப்பியமாகத் திகழ்கின்றன.
÷ஆனால், அவை சமகாலத்து இலக்கியங்களா என்பதை ஆராய வேண்டும் என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறியதை கவனத்தில் கொள்வது அவசியமானது.
÷இப்போது தமிழ் கற்க வருவோர், தேர்வில் தேறினால் போதும் என்ற நிலையிலேயே வருகின்றனர். ஆய்வு நோக்கில் அவர்கள் தமிழைக் கற்பதில்லை. அதனால்தான் இதுபோன்ற ஆய்வுகளில் மாணவர்கள் அதிக நாட்டம் செலுத்துவதில்லை.
÷சிலம்பில் கூறப்படாத பல தகவல்கள் மணிமேகலையில் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆசிரியப்பா கவிதை எழுத ஆசைப்படுவோர் மணிமேகலை படிக்க வேண்டும்.
÷தமிழ் இலக்கியத்தில் இலக்கிய மொழி, பேச்சு மொழி என இரு வகை உண்டு. நகைச்சுவை என்பது வழக்கு மொழியான பேச்சு மொழியில்தான் வரும். அத்தகைய பேச்சு மொழியை புரிந்துகொள்வதுபோல மணிமேகலையின் நடை அமைந்திருப்பதைக் காணலாம்.
÷மணிமேகலையில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது குறித்து குறிப்பிடப்படுகிறது. அதேபோல வறுமையைப் போக்க வேண்டும் என எழுதப்பட்ட முதல் காப்பியமாகவும் அது திகழ்கிறது. பட்டிமன்றம் என்ற சொல்லே மணிமேகலையில்தான் முதன்முதலில் காணப்படுகிறது.
÷மணிமேகலையில் அரசாட்சி பற்றிக் குறிப்பிடும்போது, மன்னன் செங்கோல் வளைந்தால், விண்ணில் கோள்கள் வளையும் எனக் கூறப்படுகிறது. அப்படி விண்கோள் வளைந்தால் நாட்டில் பஞ்சம் ஏற்படும். பஞ்சம், பட்டினி ஏற்பட்டால் மன்னன் ஆட்சி நிலைக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இன்றைக்கும், என்றைக்கும் பொருந்தும்.
÷சிலப்பதிகாரத்தின் சிறப்பு, அது சாமானியரைக் கதாபாத்திரங்களாக்கிய காப்பியம் என்பதுதான். கடவுளர்களையும், அரச குடும்பத்தினரையும் மையப்படுத்தாமல், வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்களைக் கதைத் தலைவனாகவும், தலைவியாகவும் கொண்ட சிலம்பு தனிப் பெருமை பெறுகிறது.
÷மணிமேகலை மேலும் ஒரு படி மேலே போய், கணிகை குலத்தைச் சேர்ந்த பெண்ணைக் காவியத் தலைவியாக்கி, பசியைப் போக்கும் உன்னதச் செயலை மனித நெறியாக்கி உயர்ந்து நிற்கிறது.
÷நிலையாமை, மறுபிறப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல கருத்துகளை எடுத்துக்கூறும் அற்புத இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது. ÷காப்பியங்கள் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கும்போதுதான் அவை இறவாமல் இருக்கின்றன.
÷பசி போக்கும் மக்கள் இலக்கியமாக மணிமேகலை திகழ்கிறது. வந்தாரை வரவேற்று உணவு தரும் தமிழர் பண்பாட்டை வலியுறுத்தும் காப்பியமாகவும் மணிமேகலை திகழ்கிறது என்றார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
÷சமகாலத்து இலக்கியங்களா?
நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது:
÷சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், அவை சமகாலத்து இலக்கியங்களா என்பதை தமிழறிஞர்கள் ஆராய்வது அவசியம்.
÷ஏனெனில், சிலப்பதிகாரத்தில் சீத்தலைச் சாத்தனார் அவையில் அமர்ந்திருக்க, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அரங்கேற்றியதாகப் பாயிரத்தில் கூறப்பட்டுள்ளது.÷சிலப்பதிகாரத்தின்படி காவிரிப்பூம்பட்டினம் செல்வச் செழிப்போடு சோழ நாட்டின் பெருமைமிக்க வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
÷மணிமேகலையின் பாயிரத்திலும், இளங்கோவடிகள் முன்னிலை வகிக்க, மதுரை கூலவாணிகன் சாத்தன் அந்த நூலை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.
÷மணிமேகலைப்படி பூம்புகார்ப் பட்டினத்தைக் கடல்கோள் கொண்டுவிட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது.
÷கடல்கோள் கொண்டதற்கு முன்னால் உள்ள காப்பியமாக சிலப்பதிகாரமும், புகார் நகரம் கடல் கொண்ட பிறகு எழுதப்பட்ட காப்பியமாக மணிமேகலையும் இருக்கும்போது, அவை நிச்சயமாக ஒரே நேரத்தில் எழுதப்பட்டவை அல்ல.
÷சிலப்பதிகாரத்தின் பாயிரத்தில் குறிப்பிடப்படும் சாத்தனும், மணிமேகலை ஆசிரியர் சாத்தனும் வெவ்வேறு புலவர்களாக இருக்கக்கூடும்.
÷நான் தமிழறிஞனல்ல. இலக்கிய ரசிகன் மட்டுமே. ஒன்பது உலகத் தமிழ் மாநாடு நடத்திவிட்டோம். ஓர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடத்திவிட்டோம். பல பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆய்வுகள் நடத்திவிட்டோம். ஐயம் திரிபுற சிலம்பும் மேகலையும் வெவ்வேறு காலத்தவையா இல்லையா என்று இன்னும் தெளிவுபடுத்தாமல் இருக்கிறோமே, ஏன் என்பதுதான் எனது கேள்வி.
÷வயிற்றுக்குச் சோறிடல்வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என பாரதி கூறினான். இதை மணிமேகலை காவியமாக வலியுறுத்தி இருக்கிறது. பசியைப் போக்குவதுதான் தலைசிறந்த அறம் என்று இந்திய சமுதாயமும் தொன்றுதொட்டு வலியுறுத்தி வருவதற்கு மணிமேகலை ஒன்றுபோதும் சான்று பகர என்றார் அவர்.
5:22 AM | | 0 Comments
சென்னையில் மொழியியல் ஆய்வு மையம் நிறுவ வேண்டும்: பொள்ளாச்சி என். மகாலிங்கம்
5:18 AM | | 0 Comments
திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு
5:16 AM | | 0 Comments
குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே: தினமணி ஆசிரியர்
old photo |
5:08 AM | | 0 Comments
திருமண வரவேற்பில் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் பரிசு
பொதுவாக, திருமண நிகழ்ச்சிகளிலும், வரவேற்பு விழாக்களிலும் கலந்து கொண்டவர்களுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவையே வழங்கப்படும். தமிழக கலாசாரத்தில் பரம்பரை, பரம்பரையாக தொடர்ந்து வரும் பழக்கங்களில் இதுவும் ஒன்று.
ஆனால், காந்தியின் சுயசரிதை புத்தங்களை வழங்கி, அதைப் பெற்றவர்களை மட்டுமல்லாமல் அதைப் பற்றி கேள்விப்பட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பெ. வடிவேல். இவரது மனைவி பத்மா.
இவர்களது மகள் அனிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்தான் தேசியத்தின் மணம் வீசியது.
இது குறித்து மணமகளின் தந்தை பெ. வடிவேல் கூறியதாவது:
இப்போது இருக்கும் சிறுவர், சிறுமிகள் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியை பற்றி அறிந்து கொள்வதற்காகவே இந்த புதிய முயற்சி. தேங்காய், பழங்கள் ஆகியவை ஒரு நாள் பயன்பாட்டோடு முடிந்துவிடும்.
ஆனால், பல காலமாக இந்த புத்தகங்கள் அவர்கள் வீட்டில் இருக்கும். அனைவருக்கும் தேசப் பிதாவை பற்றியும், விடுதலை போராட்டத்தை பற்றியும் தெரியவரும் என்றார் அவர்.
மேடைகளில் மட்டுமே காந்தியை பற்றி பேசுவதை காட்டிலும், இது போன்ற புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது காந்திய சிந்தனைகளை மக்களிடையே பரவச்செய்யும் என்பதில் ஐயமில்லை
5:05 AM | | 1 Comments
அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி: அமைச்சர் பூங்கோதை
5:03 AM | | 0 Comments
இன்றைய செய்திகள்
china medical univrsity |
5:36 AM | | 0 Comments
சீனாவுக்கு செல்லும் இந்திய மருத்துவ மாணவர்கள்
china medical univrsity |
5:27 AM | | 0 Comments
மாணவர்களின் தனித்திறமைகளைவெளிக்கொணர்வது ஆசிரியர் கடமை: இயக்குனர் பெருமாள்சாமி பேச்சு
5:16 AM | | 0 Comments
சென்னையில் மாரத்தான்: சந்தோஷ் முதலிடம்:பெண்களில் சந்திரா முந்தினார்
5:14 AM | | 0 Comments
இளைஞர்களின் வழிகாட்டி கலிங்கமலை!
5:12 AM | | 0 Comments
தனியார் பள்ளிகளுக்கு கிராக்கி:கர்நாடகாவில் திடீர் மாற்றம்
5:10 AM | | 0 Comments
உலக வங்கிக்கடன் உதவி முதலிடத்தில் இந்தியா
5:07 AM | | 0 Comments
வெளி உலகை பார்த்தன வெள்ளைப்புலி குட்டிகள்
5:05 AM | | 0 Comments
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்:மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை
5:03 AM | | 0 Comments
3ஜி சேவையால் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் பன்மடங்கு பெருகும்
5:01 AM | | 0 Comments
புதுவை அரசு மருத்துவ மாணவர்களுக்கு இலவச கல்வி
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த கல்லூரியில் ஆண்டுக்கு 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது.
தனி வகுப்பு கட்டணம்கூட வசூலிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மருத்துவக் கல்வி இலவசமாக வழங்கப்படும். மாணவர் சேர்க்கையின்போது இவர்களிடம் திருப்பி அளிக்கக்கூடிய வைப்புத் தொகையாக 10 முதல் 15 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்.
படிப்பை முடித்த பிறகு அவர்கள் செலுத்திய தொகை அவர்களிடமே திரும்ப வழங்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது விதிமுறை. அதனால் அவர்களுக்கு இடங்கள் வழங்குவது குறித்தும், அவர்களுக்கான கட்டணம் குறித்தும் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்படும்.
இம்மருத்துவக் கல்லூரிக்கு இதுவரை
137 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 200 கோடிக்குள் மருத்துவக் கல்லூரியின் மொத்த பணிகளும் முடிக்கப்படும் என்றார்
4:50 AM | | 0 Comments
படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம்
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம், ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டலம் சார்பில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 643 மாணவ, மாணவிகளுக்கு | 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கி, அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:
கடுமையான போட்டிகளின் மூலமாக உயர் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பெறுவதுதான் கல்வி. அதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி முடிய நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால், 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேர் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். நாட்டின் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
எனது அரசியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் பெறுவோர் கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.
கல்விக் கடனுக்கான வட்டி விவரம் குறித்து நிதித் துறையிலிருந்து எனக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி கிடையவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள், எதிலும் முதல் வரிசையில் இடம்பெற வேண்டும். வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வங்கித் துறையில் மட்டும் 1 லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படவிருக்கிறார்கள். அந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
விழாவில், இந்தியன் ஒவர்சீஸ் வங்கித் தலைவர் எஸ்.ஏ. பட் தொடக்க உரையாற்றினார். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் கேஆர். ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், தொழிலதிபர் பிஎல். படிக்காசு, சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் எஸ். மாங்குடி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பி.வரதராஜன், யுகோ வங்கியின் இணைப் பொது மேலாளர் டி.என்.ரெüத்ரி, பேங்க் ஆப் இந்தியா இணைப் பொது மேலாளர் ஆர்.ஏ.சங்கரநாராயணன், கனரா வங்கியின் இணைப் பொது மேலாளர் பி.ஆர்.பாலசுந்தர், ஸ்டேட் வங்கி இணைப் பொது மேலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் எம். ராமதாஸ் வரவேற்றார். இந்தியன் வங்கியின் வட்டாரத் தலைவர் கதிரேசன் நன்றி கூறினார்.
4:49 AM | | 0 Comments
இன்றைய செய்திகள்
7:23 AM | | 0 Comments