விப்ரோ நிறுவனம் கல்விக்காக 2 பில்லியன் டாலர் உதவி

பெங்களூரூ: இந்தியாவின் முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்காக 2 பில்லியன் டாலர் நிதிஉதவி அளித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான ஆசிம் பிரேம்ஜி ஆசிம் பிரேம்ஜி பவுண்டேசன் மூலம் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள கல்விநிலையங்களுக்கு வழங்குகிறார். இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 846 கோடியாகும். முதல் கட்டமாக சுமார் 700 கோடி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் ஆசம் பிரேம்ஜி பவுண்டேசன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பவுண்டேசன் மூலம் உருவாக்கப்படும் பல்கலை மூலம் 2011 கல்வி யாண்டில் 200 மாணவர்களும், அடுத்துவரும் நான்கு முதல் ஐந்தாண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் என உயரும் என பவுண்டேசன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

0 comments: