தமிழகத்தில், பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவிகளை விட, மருத்துவம் படிக்க விண்ணப்த்துள்ள மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது
சென்னை : தமிழகத்தில், பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவிகளை விட, மருத்துவம் படிக்க விண்ணப்த்துள்ள மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது. பொறியியல் படிப்புக்கு வந்துள்ள மொத்த விண்ணப்பங்களில், 40 சதவீதத்தினரே பெண்கள். ஆனால், மருத்துவப் படிப்புக்கான மொத்த விண்ணப்பங்களில் 64 சதவீதம் மாணவிகளுடையது. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு இரண்டு லட்சத்து 2,133 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 1,234 பேர் (60.47 சதவீதம்) ஆண்கள்; 66 ஆயிரத்து 172 பேர் (39.53 சதவீதம்) பெண்கள்.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 18 ஆயிரத்து 115 பேரில், 6,422 பேர் (35.45 சதவீதம்) ஆண்கள்; 11 ஆயிரத்து 693 பேர் (64.55 சதவீதம்) பெண்கள். மருத்துவப் படிப்பில் ஆண்களை விட, பெண்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ள நிலையில், பொறியியல் படிப்பில் இது நேர்மாறாக உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 295 பேர் ஆண்கள்; மூன்று லட்சத்து 19 ஆயிரத்து 956 பேர் பெண்கள். பிளஸ் 2வில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண்கள் தேர்ச்சி பெற்றிருந்தபோதும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் பெண்கள் எண்ணிக்கை, ஆண்களை விட 20 சதவீதத்திற்கும் மேல் குறைவாக உள்ளது.வரும் 28ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை நடக்கவுள்ள முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில், 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 இடங்கள் நிரப்பப்படுகின்றன. மத்திய அரசு குழுவின் அனுமதி கிடைத்த பின், தர்மபுரி மருத்துவக் கல்லூரி மற்றும் திருவாரூர், விழுப்புரம் ஆகிய இரு புதிய மருத்துவக் கல்லூரிகளும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 348 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ்., இடங்கள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 778 பி.டி.எஸ்., இடங்களும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்.பொறியியல் கவுன்சிலிங்கில், மாநில அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 7,850 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. புதிய பொறியியல் கல்லூரிகள், பழைய கல்லூரிகளில் புது பாடப்பிரிவு மற்றும் கூடுதல் இடங்கள் மூலம், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் மேலும் 10 முதல் 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கக் கூடும்.ஒரு லட்சத்து 7,850 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என, முந்தைய பொறியியல் கவுன்சிலிங் அடிப்படையில் தெரிகிறது.கடந்த ஆண்டுகளில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதில்லை. கடந்த 2007ம் ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த 97 ஆயிரத்து 255 பேரில், 35 ஆயிரத்து 566 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவில்லை.அதேபோல, 2008ம் ஆண்டு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 401 பேரில், 46 ஆயிரத்து 259 பேரும், 2009ம் ஆண்டு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 918 பேரில், 43 ஆயிரத்து 822 பேரும் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. இதே நிலை இந்த ஆண்டும் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
1:53 PM | | 0 Comments
கல்வி தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும் : அமைச்சர் பொன்முடி
கல்வி தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும் என, காரைக்குடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.காரைக்குடி அழகப்பா பல்கலையில், இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, அரசின் தற்போதைய குறிக்கோள் உயர்கல்விபெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும். இதற்கான தரத்தை உயர்த்த பல்கலைகள் கருவியாக செயல்படவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பட்டதாரியாவது உருவாகவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறது. தமிழகம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. வேலைவாய்ப்பு வழங்க,தொழில்மயமாதல் அவசியம். தொழில்மயமாதலுக்கு விவசாய நிலங்களை பயன்படுத்தியே ஆகவேண்டும். இம்முரண்பாட்டை எவ்வாறு சமாளிப்பது என ஆராய்ச்சி செய்யவேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கவேண்டும். தமிழகத்தில் தொழில்திறன்களை வளர்க்க நூறு சமுதாய கல்லூரிகள் செப்டம்பரில் துவக்கப்படும். கல்வி தரம் மேம்பட தாய் மொழியில் கற்பிக்கவேண்டும், என்றார்.
1:13 PM | | 0 Comments
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் அர்ச்சகர் படிப்புக்கு சேர இளைஞர்கள் ஆர்வம்: 30 பேர் பெயர் பதிவு செய்தனர்
12:42 PM | | 0 Comments
தமிழக ஆளுநருடன் மனிதநேய மாணவர்கள் சந்திப்பு
அப்போது மனிதநேய அறக்கட்டளை மாணாக்கர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பவரான முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அபுல்ஹாசன், மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி, துணைத் தலைவர் வெற்றி துரைசாமி, பயிற்சி இயக்குனர் வாவூசி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோரும் இருந்தனர்.
கடந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வுகளில் மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 43 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2011ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ்ஸ் பிரிலிமினரி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.
மனிதநேய அறக்கட்டளை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்திருந்த 16,800 மாணவர்களில் 12,140 பேர் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டு அவர்களில் 1,500 பேர் இறுதியாக பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று பயிற்சி இயக்குனர் வாவூசி தெரிவித்துள்ளார்.
மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெறுவது தொடர்பாக விவரங்களைப் பெற 044-24358373, 9940670110, 9840106162 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலா
12:21 PM | | 0 Comments
தமிழில் பொறியல் கல்வி
11:49 AM | | 0 Comments
அடையாளம் தெரியாதவர் பரிசு மூளை வளர்ச்சி பாதித்த இந்திய சிறுவனுக்கு லேப்டாப்
12:23 AM | | 0 Comments
பெரம்பலூரில் கேந்திர வித்யாலயா பள்ளி
12:07 AM | | 0 Comments
சிறப்பாக புரிந்துகொள்வது எப்படி?
இதுபோன்ற காரணங்களை தவிர்த்து, சரியாக புரிந்துகொள்வது எப்படி?
11:49 PM | | 0 Comments
நேர மேலாண்மை இல்லையென்றால் வெற்றி பெற முடியாது ': திருச்சி அண்ணா பல்கலை. துணைவேந்தர்
11:34 PM | | 0 Comments
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 30 தொடக்கம்
10:50 PM | | 0 Comments
ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு: திருச்சியில் ஜூலை 2-ல் தொடக்கம்
சென்னை, ஜூன் 17: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களுக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி திருச்சியில் தொடங்குகிறது.
10:20 PM | | 0 Comments
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவரா? இதோ இலவச தொழில்நுட்ப பயிற்சி
10:11 PM | | 0 Comments
25 வீதமான விபத்துக்களுக்கு களைப்பே காரணம்
June 29, 201025 வீதமான விபத்துக்களுக்கு களைப்பே காரணம்
12:51 PM | | 0 Comments
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை விஜயகாந்த் வரவேற்பு!
12:24 PM | | 0 Comments
மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !
12:17 PM | | 0 Comments