நாளை பிற்பகல் + 2 தனித்தேர்வு ரிசல்ட்

சென்னை : பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்தில் 09ம் தேதி வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 தனித்தேர்வு, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்தன. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இத்தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்திலும் (www.dge1.tn.nic.in), பள்ளிக்கல்வி இணையதளத்திலும் (www.pallikalvi.in) 09ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.மதிப்பெண் சான்றிதழ்கள், வரும் 15, 16, 18 ஆகிய தேதிகளில், சம்பந்தபட்ட தேர்வு மையங்களில் வழங்கப்படும். மாணவர்கள், தேர்வெழுதிய மையங்களுக்கு நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.விடைத்தாள் நகல் பெறவோ அல்லது மறுகூட்டல் செய்யவோ மாணவர்கள் விரும்பினால், மேற்கண்ட மூன்று தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, 18ம் தேதி மாலை 5.45க்குள், அதே அலுவலகங்களில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: