பெங்களூரூவில் முதல் விமான பல்கலை.,


http://img.dinamalar.com/data/large/large_118833.jpg

மெல்போர்ன்: உலகின் முதல் விமான பல்கலை மற்றும் பயிற்சி மையம் பெங்களூரூவில் அமைய உள்ளது. 125 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகும் இந்த மையம் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட சென்டர் பார் ஆசிய பசிபிக் ஏவியேசன் நிறுவனமும்(சிஏபிஏ) பெங்களூரூவை சேர்ந்த சுப்ரமண்ய கன்ஸ்ட்ரக்ஷன் டெவலப்மென்ட் கம்பெனியும்(எஸ்சிடிசி) இணைந்து நடத்த உள்ளது.


வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் விமான போக்குவரத்துக்கு உள்ள தேவைப்பாடு அதிகரித்து வருவதை முன்னிட்டும், அடுத்த பத்தாண்டுகளில் 200 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் விமான போக்குவரத்திற்கு முதலீடு செய்யக்கூடும் என்று எதிர்பார்ப்பதாலும் இந்த பல்கலைகழகம் துவங்கப்படஉள்ளதாக சிஏபிஏ குரூப்பை சேர்ந்த எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் பீட்டர் ஹார்பின்சன் தெரிவித்தார்.


எஸ்சிடிசியின் சேர்மன் பாலசுப்ரமணியம் மேலும் கூறியதாவது: பெங்களூருவை தொடர்ந்து மும்பை ,டில்லி போன்ற நகரங்களில் செயற்கை கோள் கல்வியுடன் இந்த பயிற்சியை அளிக்கப்பட உள்ளதாக கூறினார். தொடர்ந்து இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்,தெற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் இது போன்ற பல்கலைகழகம் துவங்கப்பட உள்ளதாக கூறினார்.


பல்கலைகழகத்தில் சர்வதேச தரத்திலான பைலட்டுகள் இன்ஜினியர்கள்,டிராபிக் கண்ட்ரோலர்கள் மற்றும் பணிமனைகள், ஆய்வகங்கள் ,ஆராய்ச்சிமையம், போன்றவற்றை உருவாக்குவதே எங்களின் நோக்கம். இதற்காக சிஏபிஏ அமைப்பினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் ,சிவில் ஏர் நேவிகேஷன் சர்வீஸ் ஆர்கனைசேஸன்,பிளைட் சேப்டி பவுண்டேசன் போன்ற அமைப்புகளிடம் பேச்சுவார்த்தைநடத்தி வருகின்றனர்.


இந்த பல்கலை கழகம் அமைப்பதற்கு பெங்களூரூவை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் பெங்களுரூவில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆராய்ச்சிமையம் வடிவமைப்பு மையம்,மற்றும் பெரியளவிலான தொழில்நுட்ப மையங்கள் போன்றவையும் மக்களின் காஸ்மோ பாலிடன் வாழ்க்கைதரமும் ஒரு காரணம் என தெரிவித்தனர்.

 

0 comments: