அண்ணாமலை பல்கலையில் புதிய படிப்புகள் அறிமுகம்

சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வியில் புதிய படிப்புகளை மத்திய அமைச்சர் வாசன் அறிமுகம் செய்து வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில், 2010 -11 ஆண்டின் புதிய படிப்புகளான டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் அறிமுகப்படுத்தி பேசுகையில், "பப்ளிஷிங் மற்றும் டிஜிட்டல் புத்தகங்களின் அபரிமிதமான தொழில் நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் நூலகங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது. வருங்காலத்தில் இத்தகைய டிஜிட்டல் புத்தகங்கள் படிப்படியாக நூலகங்களில் அமையப்பெறும்' என்றார்.அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் பேசுகையில், "சென்னையில் உள்ள டிஜிஸ் கேப் கேலரி மற்றும் பிலாய் நிறுவனமான ஸ்டைலஸ் அகடமியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பி.எஸ்சி., டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் டிப்ளமோ படிப்பான செக்யூரிட்டி அனாலிசிஸ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்' என்றார்.

 

0 comments: