வழி தவறும் மாணவச் செல்வங்கள்


-என்.நடராஜன்



சுமார் 14 வருடங்களாக பொரியியல் படித்த மாணவர்களுக்கு  பயிற்சியா 
ளராக இருந்தபோது கவனித்த ஒரு கவலைக்கிடமான பிரச்சனை இன்றும் தொடர்கிரது. 
முக்கியமாக, கிராமப்புரம் மற்றும் நகர்ப்புர  மக்கள் தங்கள் பிள்ளைகள்
தங்களைவிட வெல்வமும் சிறப்புமாக வாழ வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணத்தில் தங்கள் வாழ்வில் பல தியாகங்கள் செய்கிறார்கள். 
ஆனால் 50 சதவிகிதத்திற்கும்  அதிகமான மாணவர்கள், கல்வியில்  தீவிர கவனம் செலுத்தாமல்  கேளிக்கைகளில் செலவழிப்பதும்  ஒரு உண்மை.
பிற்காலம், அதுவும் போட்டிகள் நிறைந்த  உலகத்தில் பெற்றோரின் தியாகங்கள் பயன் இல்லாமல் போகும் என்பதை இந்த வகை  மாணவர்கள் சிறிதும் உணர்வதில்லை. ் 
கல்விக் காலம்  முடிந்தபின், குறைந்த மதிப்பெண்களுடன், சில வருடங்கள் வேலைக்காக  அலைவதும். பிறகு மேலும் மேலும் பயிற்சிகள் பெறுவதற்கு நேரம் மற்றும் பெற்றோரின் உழைப்பை நாசம் செய்யும் மக்களை என்ன சொல்ல? 
நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள், ஒரு மாதிரியாக, கல்விக்  காலத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருப்பதால்  அவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதுடன்., கல்லூரி நாட்களுக்குப் பிறகு தனி[ பயிற்சிகளில் பண விரையம் செய்வதில்லை.
கல்லூரிப் படிப்பு  முடித்தவுடனே, வேலையில் சேர்ந்து வாழ்க்கையில்; செட்டிலாவது  கண்கூடு. 
இதற்கு  வழி தவறிய மாணவர்கள்  உதவியுடன் தற்போதைய மாணவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்துவது  கல்வியாளர்களின்
தலையாய  கடமை. இப்படிப்பட்ட பல மாணவர்களை  பயிற்சி தந்து
வேலையில்  அமர்ந்திட முகச் சமீப உதவியதுண்டு. வழிதவறிய மாணவர்களை
பிரித்துக்காட்டுவது அவர்கள் தேர்வுகளில் பெறும் மிகக் குறைந்த மதிப்பெண்கள். 

 

0 comments: