கல்வி கடனுக்கு வட்டி தள்ளுபடி

சிவகங்கை : தேசிய வங்கிகளில் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி பெற, கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பொருத்து, தேசிய வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என, அரசு அறிவித்த போதும், அதற்கான உத்தரவு, வங்கிகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை. "அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. எனவே வட்டியை செலுத்த வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வட்டியை தள்ளுபடி செய்து வங்கிகள் கடிதம் அனுப்பி வருகின்றன. முதற்கட்டமாக, 2009 - 10ல் பெற்ற கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இதில் பயன்பெறும் மாணவர்களின் குடும்ப வருமானம், 4.50 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் விவரம், வருமான சான்று போன்ற ஆவணங்களை வங்கியில் ஒப்படைக்க வேண்டும்,'' என்றார்.

 

0 comments: