எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வு முடிவுகள் -நாளை வெளியீடு

சென்னை : கடந்த மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வுகளுக்கான முடிவுகள், நாளை 18ம்தேதி வெளியிடப்படுகிறது.

தேர்வுத்துறை அறிவிப்பு: நாளை பிற்பகல், தேர்வுத்துறை இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மதிப்பெண் சான்றிதழ்கள், 25, 26, 27 ஆகிய தேதிகளில், அந்தந்த தேர்வு மையங்களில் வழங்கப்படும். மாணவர்கள் நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள், 25, 26, 29 ஆகிய தேதிகளில், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம்.

தேசிய திறனாய்வுத் தேர்வு: தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழி திறன்படிப்பு உதவித் தொகைகளுக்கான தேர்வு, வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே, "ஹால் டிக்கெட்டுகள்' வழங்கப்படும். வரும் 18ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்' பெறாத மாணவர்கள் (தேசிய திறனாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள்), அந்தந்த மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களையும், தேசிய வருவாய் வழி திறன்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து, "ஹால் டிக்கெட்' கிடைக்காத மாணவர்கள், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்வு நாளன்று, காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெறும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

 

0 comments: