பாலிடெக்னிக் பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம்

சென்னை: "பாலிடெக்னிக் பாடத்திட்ட மாற்றம் குறித்து, இம்மாதம் 19ம் தேதிக்குள் கல்வியாளர்கள், கல்லூரி முதல்வர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம்' என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறன், பயிற்சியை இன்றைய தொழில்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையிலும், மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பாலிடெக்னிக் படிப்பிற்கான பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல்(2011 - 12) மாற்றியமைக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம், வல்லுனர் குழுவால் வரையறுக்கப்பட்டு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் (www.tndte.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், புதிய பாடத்திட்டம் குறித்து தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும்"socdcdote@yahoo.co.in'    என்ற இ-மெயிலுக்கு 19ம் தேதிக்குள் அனுப்பலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

0 comments: