இளமையில் சேமிப்பு; முதுமையில் பாதுகாப்பு: விழாவில் கலெக்டர் பேச்சு

கரூர்: கரூரில் உலக சிக்கன நாள் விழா கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த பேச்சுப்போட்டியில் சேரன் மெட்ரிக் பள்ளி அகிலா முதல்பரிசு, தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளி சீத்தாலட்சுமி இரண்டாம் பரிசு, பள்ளபட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரோசினி மூன்றாம் பரிசு பெற்றனர். கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது: நமது நாடு முழுவதும் உலக சிக்கன நாள் விழா அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தகையை சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும். பாடுபட்டு தேடிய பணத்தை, பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது. தபால்துறை  செயல்படுத்தும் சிறு சேமிப்பு திட்டங்களில் சேமிப்பவர்களுக்கு நல்ல வட்டி கிடைப்பதுடன், அத்தொகை அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற பயன்படுகிறது.
இளமையில் சேமிப்பு முதுமையில் பாதுகாப்பு, ஒருவர் சேமிக்கும் தொகையானது முதுமையில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கிறது.  ஆடம்பர செலவுகளை குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டு முன்பே திருவள்ளுவர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் வாக்கை கடைபிடித்தால், வாழ்க்கை சிறப்புறும்.  அனைவரும் சிக்கனமாக செலவு செய்து அருகிலுள்ள தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சி.இ.ஓ., கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


 

0 comments: