மாணவரை தங்கள் கண்ணாக ஆசிரியர்கள்நினைக்க வேண்டும்: கரூர் கலெக்டர் பேச்சு

கரூர்: ""மாணவர்களை தங்கள் கண்ணாக நினைத்து ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும்,'' என்று கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் கரூரில் நடந்தது.தேசிய விருது பெற்ற அரவக்குறிச்சி உஸ்வதுன்ஹசானா ஓரியண்டல் துவக்கப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆசியாபேகம், மாநில் விருது பெற்ற குப்புரெட்டிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கோவிந்தராஜ், சீத்தப்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மலர்க்கொடி, சிவாயம் மேற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தாரகேஸ்வரி, தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கந்தசாமி, அவரக்குறிச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பூபதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.


விழாவில், 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற 31 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த 550 ஆசிரியர்களுக்கும், ஓய்வு பெற்ற 38 ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கலெக்டர் பேசியதாவது:வணக்கத்துக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களை தங்கள் கண்ணாக நினைத்து ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டு ம். தாயாகவும் மாறி அன்பு, க ண்டிப்பு காண்பிக்க வேண்டு ம். முக்கியமாக மாணவர்கள் 100 சதவீதம் மனமகிழ்வோடு, மனநிறைவோடு வாழ ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சி.இ.ஓ., கந்தசாமி, கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர். விழா முடிவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

 

0 comments: