இயற்கை பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால்..



கூடலூர்: "இயற்கை பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால், 25 ஆண்டுகளில் தண்ணீர் மற்றும் காற்றுக்கு தவிக்க வேண்டிய நிலை உருவாகும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பு சார்லஸ் (53). இயற்கை மற்றும் நீர் பாதுகாப்பை வலியுறுத்தி, கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி முதல் சைக்கிள் மூலம் நம் நாட்டை சுற்றி வருகிறார். சமீபத்தில் கேரளா மாநிலம் வந்த அவர், கடந்த 12ம் தேதி தமிழக - கேரள எல்லையான தாளூர் வழியாக கூடலூர் வந்தார். அங்குள்ள தனியார் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதன்பின், தனது சுற்றுப்பயணம் குறித்து அவர் கூறியதாவது: இயற்கை அழிவு, ஏற்படும் பாதிப்புகள், வாகன புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும்; உலக வெப்பமயம், இயற்கை பேரிடர்களை தடுக்க வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே சைக்கிள் மூலம் நம் நாட்டை சுற்றி வருகிறேன். இதுவரை 20 மாநிலங்களில் 42 ஆயிரம் கி.மீ., சைக்கிள் மூலம் சுற்றி வந்ததுடன், 5000 பள்ளிகளில் இயற்கை பாதுகாப்பு குறித்து பேசியுள்ளேன். தமிழ், ஆங்கிலம் தவிர, மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள் தெரியும்; பிற மொழிகளை கற்பதன் மூலம், நாம் கூடுதல் பலம் பெற முடியும். என் முயற்சிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இதற்கு பின்பு, வெளிநாடுகளிலும் எனது பயணத்தை தொடர முயற்சி மேற்கொண்டுள்ளேன். இயற்கையை பாதுகாக்காமல் அலட்சியம் காட்டினால் 25 ஆண்டுகளில் தண்ணீருக்கும், இயற்கை காற்றுக்கும் சிரமப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்,'' என்றார்.

 

0 comments: