பேஸ்புக்கை பயனுள்ள தளமாக மாற்றிய தமிழர்கள்

சென்னை : முகநூல் எனப்படும் பேஸ்புக் மூலம் கருத்து போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்து முகநூலை பயனுள்ள தளமாக தமிழர்கள் மாற்றியிருக்கிறார்கள். இன்றைய தினம் ‌பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்கிற அளவுக்கு ஆண் - பெண் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது பேஸ்புக்.
சிலபல சட்டவிரோத சம்பவங்களை அரங்கேற்றியிருக்கும் இந்த பேஸ்புக் தளத்தை பயனுள்ள தளமாக மாற்றிக்காட்டியிருக்கிறார் தமிழர் ஒருவர். வசந்தகுமார் கிராபிக் டிசைனர் என்ற பெயருடைய பேஸ்புக் பயனாளர் தனது தளத்தில் நண்பர்களுக்கிடையே போட்டி நடத்தி பரிசுகளை வழங்க முடிவு செய்தார். அதன்படி சென்னை கிரியேட்டர்ஸ் என்கின்ற நிறுவனத்தின் துணையுடன் இணையத்தின் மூலம் “குடும்பத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணாம் ஆண்களா? பெண்களா?” என்ற ஒரு கருத்து மன்றத்தை உருவாக்கினார். இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த போட்டிக்கு நடுவர்களாக ஷண்முக மூர்த்தி, சரவணன், வசந்தகுமார் ஆகியோர் இருந்தனர். துபாயை சேர்ந்த தமிழரான சாதிக் அலியும் ‌அங்கிருந்தபடியே போட்டிக்கான ஏற்பாடுகளை கவனித்தார்.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் நடந்தது. முதல் பரிசை வென்ற முனுஸ்வாமி முத்துராமனுக்கு ரூ.2000 மதிப்புள்ள பரிசுப்பொருளும், இரண்டாவது பரிசினை வென்ற கௌதம் மற்றும் புவனேஷ்குமாருக்கு தலா ரூ.1250 மதிப்புள்ள பரிசுப்பொருளும் மூன்றாவது பரிசு வென்ற செல்வி மற்றும் வெங்கட் ஆகியோருக்கு ரூ.750 மதிப்புள்ள பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டன. ‌மேலும் 12 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது

பரிசளிப்பு விழாவின் ஒருகட்டமாக பேஸ்புக் நண்பர்கள் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளியின் குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

 

0 comments: