தொழில் பழகுனர் பயிற்சி வாரிய வேலைவாய்ப்பு முகாம்
சென்னை : தொழில் பழகுனர் பயிற்சி வாரியம், தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. தொழில் பழகுனர் பயிற்சி வாரிய தென்மண்டல இயக்குனர் அய்யாகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று, 2009-10 கல்வியாண்டில், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., மற்றும் எம்.சி.ஏ., பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக, வரும் 13, 14ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளோம்.
புதுக்கோட்டை மாவட்டம், புலன்குளத்தில் உள்ள கிங்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர்,careers.cognizant.com என்ற இணையதளத்தில், தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தகுதியானவர்களுக்கு 13ம் தேதி எழுத்துத் தேர்வையும், 14ம் தேதி நேர்காணலையும், முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான சி.டி.எஸ்., நடத்தும்.
மாநில அளவிலான இம்முகாமில் பங்கேற்போருக்கு, தஞ்சை புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் மற்றும் கந்தர்வகோட்டையிலிருந்து பஸ் வசதியும், தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 200 பேர், டி.சி.எஸ்., மற்றும் சி.டி.எஸ்., நிறுவனங்களில் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொழில் பயிற்சி பெறுவோர் வசதிக்காக துவக்கப்பட்டுள்ளhttp://www.boatsrp.com என்ற இணையதளத்தை, வரும் ஜனவரி முதல் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 04362-282474, 282395 / 96 எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அய்யாகண்ணு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment