இந்தியாவின் எதிர்காலம் மாணவர் கையில்: வங்கி அதிகாரி பேச்சு

ராசிபுரம்: ""இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன,'' என, ஞானமணி கல்லூரியில் நடந்த விழாவில், கரூர் வைஸ்யா வங்கி முதன்மை பொது மேலாளர் சுகுமார் பேசினார்.ராசிபுரம் ஞானமணி கல்லூரி வணிக மேலாண் துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது.


கல்லூரி நிறுவன தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார். தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன், நிர்வாக அதிகாரி பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மாலாலீனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கரூர் வைஸ்யா வங்கி முதன்மை பொது மேலாளர் சுகுமார் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கி பேசியதாவது:நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. அதுபோல் மாணவ, மாணவியர் தங்கள் அறிவுத்திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் உங்களை போன்ற மாணவர்களால் உருவாக்கப்பட்டது தான். தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் மாணவர்களே. இது இந்தியர்களின் அறிவாற்றலையும், தொழில் நுட்ப வளர்ச்சிøயும் காட்டுகிறது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி மாணவர் கையில்தான் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

0 comments: