புதுவை: 100 எம்.பி.பி.எஸ். இடங்கள்: இன்று இறுதிகட்ட கவுன்சலிங்

புதுச்சேரி, செப். 24: புதுச்சேரியில் காலியாக இருக்கும் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சனிக்கிழமை இறுதி கட்ட கவுன்சலிங் நடைபெறுகிறது.


இது குறித்து மத்திய சேர்க்கைக் குழுவின் இணையதளத்தில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 23 இடங்கள் காலியாக உள்ளன. இதில் பொதுப் பிரிவு 12, பிற்பட்டோர் பிரிவு 6, தாழ்த்தப்பட்டோர் பிரிவு 3, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 2 இடங்கள் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 77 இடங்கள் காலியாக உள்ளன. இதில் பொதுப் பிரிவில் 29, பிற்பட்டோர் பிரிவு 5, மிகவும் பிற்பட்டோர் பிரிவில் 18, பிற்பட்டோர் பழங்குடியினர் 2, தாழ்த்தப்பட்டோர் 10, விடுதலைப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் 3, மாற்றுத் திறனாளிகள் 8, முன்னாள் படை வீரர்கள் 1 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு காரணமாக கவுன்சலிங் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்தியச் சேர்க்கைக் குழு கூறியுள்ளது

 

0 comments: