3 பதக்கங்களை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர்

வாஷிங்டன், செப்.26- அமெரி்ககாவில் விர்ஜீனியா கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பக் கலைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அவருக்கு இந்த பதக்கங்களை பிரபல மணல் சிற்பக் கலைஞர் புரூஸ் எல் தாம்ப்ஸன் வழங்கினார்.
"மணல் சிற்பக் கலையில் ஒரே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் 3 பதக்கங்களை நான் பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது." என்று சுதர்சன் பட்நாயக் விழா மேடையில் தெரிவித்தார்.
ஒரிசாவைச் சேர்ந்த சுதர்சன் இதுவரை 40க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். மேலும், அங்கு மணல் சிற்பக் கலைக்கான கல்லூரி ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்

 

0 comments: