காவலர் பணிக்கு அக். 4-ம் தேதி உடல் திறன் தேர்வு

வேலூர், செப்.28: வேலூரில் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் சிறைக் காவலர்களுக்கு உடற்தகுதி திறன் தேர்வு துவங்குகிறது.

 தமிழகத்தில் சிறைக் காவலர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு ஏற்கெனவே எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் உடற் திறன் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள், வரும் 4-ம் தேதி காலை 6 மணிக்கு விளையாட்டு அரங்கிற்கு வந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து அனுமதிச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம். உடற் திறன் தேர்வுக்கு வருவோர் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட காவல் துறை அலுவலகம் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

 

0 comments: