ஆதித்தனார் பிறந்த நாளில் வா.செ.குழந்தைசாமிக்கு மூத்த தமிழறிஞர் விருது

சென்னை: சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளில், மூத்த தமிழறிஞர் விருது  குழந்தைசாமிக்கும், இலக்கிய பரிசு கவிஞர் மேத்தாவுக்கும் வழங்கப்படுகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளில், ஆண்டுதோறும் மூத்த  தமிழறிஞர் விருது மற்றும் இலக்கிய பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான  மூத்த தமிழறிஞர் விருதுக்கு,   தமிழுக்கு சிறப்பாக தொண்டாற்றி வரும்  வா.செ. குழந்தைசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெள்ளி பட்டயத்துடன், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இதே போல, "மு.மேத்தா கவிதைகள்' என்ற கவிதை நூலுக்காக மு.மேத்தாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் இலக்கிய பரிசு வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழா ஆதித்தனாரின் 106வது பிறந்த நாளான, 27ம் தேதி,  (நாளை மறுதினம்) சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் நடைபெறுகிறது. பரிசுகளை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் வழங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

0 comments: