முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும்.
சேலம்: மாநில அளவிலான மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், சேலத்தில் நாளை நடக்கிறது. தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கும். இம்மாதத்துக்கான ஆலோசனைக் கூட்டம், சேலம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நாளை நடக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு தேவையான விவரங்களை திரட்டுவது, மாணவர் மற்றும் ஆசிரியர் விகிதம் சரிபார்ப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment