வேலைவாய்ப்பு கூடுதல் வகுப்புகள் துவக்கம்

திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வேலை வாய்ப்பிற்கான கூடுதல் வகுப்புகள் துவக்க விழா நடந்தது. முதல்வர் நேரு தலைமை வகித்தார். பொருளாளர் கோவிந்தராஜன், இயக்குனர் ராஜாகோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அர்ச்சுனன் வரவேற்றார்.மதுரை காமராஜ் பல்கலை வளர்ச்சிக் குழு டீன் டேவிட்அமிர்தராஜன் துவக்கி வைத்து பேசுகையில், ""தற்போது, படிக்கும்போதே வேலைவாய்ப்பிற்கான வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. சுற்றுலா, ஹிந்தி, வீடியோகிராபி போன்றவற்றிற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புள் அதிகம் உள்ளன. இதுபேன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'" என்றார். பேராசியர் மாறன் நன்றி கூறினார்.

 

0 comments: