புற்றுநோயாளிகளுக்கு உதவ மாரத்தான் ஓட்டம்

சென்னை : புற்று நோய் பாதித்த மாணவர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெரீனாவில் வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள், மாரத்தான் ஓடினர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணர்வகள், குழந்தைகளுக்கு உதவ வைஷ்ணவா கல்லூரி என்.சி.சி., மாணவர்கள், சென்னை மெரீனாவில் நேற்று காலை மாரத்தான் ஓட்டம் சென்றனர். மாரத்தான் ஓட்டத்தை, தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா துவக்கி வைத்து பேசினார்.அப்போது, "இதுபோன்ற சேவைகளில் மாணவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது' என்றார்.அண்ணா சதுக்கத்தில் துவங்கிய பேரணி, காந்தி சிலை வரை சென்றடைந்தது.

 

0 comments: