மகளிருக்கான தமிழ் இசைப் பாடல் போட்டி

சென்னை: கிழக்கு தாம்பரம் நண்பர்கள் வட்டம் சார்பில், மகளிருக்கான தமிழ் இசைப் பாடல் போட்டி நடத்தப்பட்டது. குடும்பத் தலைவியரும், பல துறைகளில் பணிபுரியும் மகளிரும் இசைப் பயிற்சி பெற்றும் கூட அதை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். அவர்களின் இசைத் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக, கிழக்கு தாம்பரம் நண்பர்கள் வட்டம் சார்பில், மகளிருக்கான தமிழ் இசைப் பாடல் போட்டி நேற்று நடத்தப்பட்டது. கிழக்கு தாம்பரம் சீதாதேவி கரோடியா பள்ளியில் நடந்த போட்டியில், 20 முதல் 40 வயது வரை, 40 வயதுக்கு மேல் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 75க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சசிதரன், சாவித்திரி வெங்கட்ராமன், சடகோபன், முரளிதரன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிப் பெற்ற பெண்களுக்கு வெங்கடமீனலோசனி, பரிசுகள் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கிழக்கு தாம்பரம் நண்பர்கள் வட்டத்தின் தலைவர் சம்பத், செயலர் பாலசுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


 

0 comments: