பிரபல ஹிந்தி எழுத்தாளர் கங்கையா லால் நந்தன் மறைவு

புது தில்லி, செப். 25: பிரபல ஹிந்தி எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கங்கையா லால் நந்தன், தில்லியில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 77.
குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சனிக்கிழமை காலையில் நந்தன் மரணமடைந்தார்.
அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவிக்கப்பட்டுள்ள அவர் பாரக், சாரிகா உள்ளிட்ட பத்திரிகைகளில் ஆசிரியராகப் பொறுப்பு வகித்துள்ளார். நவபாரத் டைம்ஸ் இதழிலும் பணியாற்றியுள்ளார்.
36-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். கவிதைகள், பாடல்கள் எழுதுவதிலும் நந்தன் தனித் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்

 

0 comments: