சர்வதேச சுற்றுச்சூழல் ஆளுமைப் பயிற்சிக்கு 2 இந்திய மாணவர்கள்

காங்டோக், செப்.25- ஜப்பானில் ஹிரோஷிமா பல்கலைக்கழகம் நடத்தும் சர்வதேச சுற்றுச்சூழல் ஆளுமைப் பயிற்சிக்கு 2 இந்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனிமேஷ் லுலம் ராய், ரவீந்திர மணி பிரதான் என்னும் அந்த இரு மாணவர்களும் சிக்கிம் பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஏசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே உள்ள மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அவர்கள் ஜப்பானில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிக்கிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மஹமேந்திர லாமா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த பயிற்சிக்கு இந்தியாவில் இருந்து இந்த இரு மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 comments: